புதுதில்லி, ஜூலை 25- பிரதமர் ஆய்வகத்தில் புதிய பரி சோதனை மேற்கொள்ளப்படுவதாக அக்னிபாதை திட்டம் குறித்து காங்கி ரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக ராகுல் காந்தி கூறியிருப்பதாவது: ஒவ்வொரு ஆண்டும் 60 ஆயிரம் வீரர்கள் ஓய்வு பெறுகின்றனர். இவர் களில் 3 ஆயிரம் பேருக்கு மட்டுமே அரசு வேலை கிடைக்கிறது. இந்நிலை யில், 4 ஆண்டு கால ஒப்பந்தத்துக்கு பிறகு ஓய்வுபெறும் ஆயிரக்கணக் கான அக்னி வீரர்களின் எதிர்காலம் என்ன? பிரதமரின் ஆய்வகத்தில் இந்தப் புதிய பரிசோதனையால் நாட்டின் பாது காப்பு, இளைஞர்களின் எதிர்காலம் ஆகிய இரண்டும் ஆபத்தில் உள்ளன. இவ்வாறு அவர் கூறியுள்ளார். நாட்டின் முப்படைகளில் 17.5 வயது முதல் 21 வயது வரையிலான இளை ஞர்களை 4 ஆண்டுகளுக்கு பணிக்கு அமர்த்தும் அக்னிபாதை திட்டத்தை ஒன்றிய அரசு கடந்த மாதம் அறிவித்தது.