சென்னை,ஏப்.6- அமைதியை சீர்குலைக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாட்டிலிருந்து உடனே வெளியேற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செய லாளர் கே.பாலகிருஷ்ணன் வெளி யிட்டுள்ள அறிக்கை வருமாறு: ஆளுநர் ஆர்.என்.ரவி குடிமைப் பணித் தேர்வு எழுதும் மாணவர்கள் மத்தி யில் பேசியபோது, நாவடக்கம் இல்லா மல், வாழ்வுரிமைக்காக போராடிய தூத்துக்குடி மக்களை கொச்சைப்படு த்தும் விதத்தில் பேசியுள்ளது வன்மை யான கண்டனத்திற்குரியதாகும். மேலும் ஆன்லைன் ரம்மி தடைசட்ட மசோதா வுக்கு இதுவரை ஒப்புதல் கொடுக்க வில்லை என்பதிலிருந்து அந்த சட்டம் நிறைவேற்றப்படக் கூடாது என்பதே அர்த்தம் என தெரிவித்துள்ளார். ஆளுநரின் இக்கருத்துக்கள் அரசியல் சாசன வரம்புகளை மீறிய அடாவடித் தனமானது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
ஆளுநர் என்பவர் மாநில அமைச்சர வையின் கூட்டு ஆலோசனை அடிப்படை யில் செயல்பட வேண்டுமென அரசியல் சாசனம் வகுத்தளித்துள்ளது. இந்நிலை யில், தமிழக சட்டப்பேரவையால் நிறை வேற்றப்பட்ட 20-க்கும் மேற்பட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டுள்ளார். ஆன்லைன் சூதாட்டத் தால் 60-க்கும் மேற்பட்டவர்கள் தற்கொ லையில் மாண்டு போயுள்ளனர். மேலும், பல்லாயிரம் குடும்பங்கள் சொத்துக் களை இழந்து நடுத்தெருவில் நிற்கின் றன. ஆன்லைன் தடை மசோதாவை தமிழக சட்டப்பேரவை இரண்டாவது முறை நிறைவேற்றிய பின்னரும் ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்திருப்பது அரசியல் சாசனத்திற்கு முழுவதும் விரோதமானதாகும்.
தூத்துக்குடியில் இயங்கிய ஸ்டெர்லைட் ஆலையினால் சுற்றுச் சூழல் பாதிக்கப்பட்டு மக்களுடைய உயி ருக்கும், உடலுக்கும் பேராபத்து ஏற்பட்ட நிலையில், அந்த ஆலையை மூட வேண்டுமென அமைதியாக போராடிய மக்கள் மீது காவல்துறை கண்மூடித் தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தி 13 பேர் படுகொலை செய்யப்பட்டனர். தற்போது, அம்மக்களை தூண்டிவிட்டு ஸ்டெர்லைட் ஆலையை மூட வைத்து விட்டதாகவும், இப்போராட்டத்திற்கு வெளிநாட்டு சக்திகளின் கை இருப்ப தாகவும் ஆளுநர் கூறியிருப்பது, அமைதி யாக போராடிய மக்களை கொச்சைப் படுத்துவது வன்மையான கண்டனத்திற் குரியதாகும். சென்னை உயர்நீதிமன்ற மும், மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும் ஆலையை மூட உத்தரவிட்டிருந்ததை ஆளுநர் அறியாதவர் போல் பேசியிருக்கிறார். தமிழ்நாட்டின் ஆளுநராக பதவி வகித்துக் கொண்டு தமிழ்நாட்டுக்கும் தமிழக மக்களுக்கும் தொடர்ந்து எதிரான கருத்துக்களையும், அரசியல் சாசனத்திற்கு விரோதமாக தொடர்ந்து கருத்து தெரிவிக்கும் ஆர்.என்.ரவி ஆளு நராக நீடிப்பதற்கான அருகதை அற்றவர். அவர் உடனடியாக பதவி விலகக்கோரி தமிழகம் முழுவதும் கண்டனக் குரல் எழுப்ப வேண்டுமென அனைத்து ஜனநாயக சக்திகளையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.