புதுதில்லி, ஆக. 10 - பாஜக எம்.பி. பிரிஜ் பூஷண், மல்யுத்த வீராங்கனைகளின் மார்பில் கைவைத்த போது வராத கோபம், பறக்கும் முத்தத்திற்கு மட்டும் வருகிறதோ? என்று ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு, மகளிர் ஆணையத் தலைவர் ஸ்வாதி மாலிவால் கேள்வி எழுப்பியுள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீது பேசிய போது, அவரைப் பேசவிடாமல் பலசமயங் களில் பாஜக அமைச்சர்கள், எம்.பி.க்கள் குறுக்கீடு செய்தனர். அமளியில் ஈடுபட்ட னர். அந்த எதிர்ப்பையும் மீறி தனது உரை யை பேசிமுடித்த ராகுல் காந்தி, நீங்கள் என்மீது வன்மத்தை, வெறுப்பை காட்டி னாலும், நான் உங்களுக்கு அன்பையே பதிலாக தருகிறேன் என்று கூறும்விதமாக செய்கை மூலம் பறக்கும் முத்தம் வழங்கினார். ஆனால், பாஜக பெண் எம்.பி.க்களைப் பார்த்து, தவறான நோக்கத்தில்தான் ராகுல் காந்தி இவ்வாறு தகாத முறையில் சைகை செய்ததாகவும், இதற்காக ராகுல் காந்தி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானி ஆவேசம் காட்டினார். மேலும், தனது தலைமையில் என்டிஏ பெண் எம்.பி.க்களைத் திரட்டிச் சென்று மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவிடம் கடிதமும் கொடுத்தார். இதற்கு இந்தியா கூட்டணி தலைவர்
கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
“ராகுல் காந்தி பேசியபோது அனைத்து அமைச்சர்களும் எழுந்து நின்று இடையூறு செய்தனர். ஆனாலும், அவர் அன்பின் (லவ்) வெளிப்பாடாக சைகை செய்தார். இதில் அவர்களுக்கு என்ன பிரச்சனை?. அன்பின் வெளிப்பாடாக காட்டப்படும் சைகைகளை புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு பாஜக-வினருக்கு வெறுப்புணர்வு உள்ளது. உண்மையிலேயே பாஜக-வினர் வெறுப்புணர்வுக்கு பழகிவிட்டனர் என நினைக்கிறேன். இதனால்தான் அன்பை அவர்களால் ஏற்க முடியவில்லை. ஆனால் ராகுல் காந்தி அப்படியில்லை. எம்.பி. யாக தகுதி நீக்கம் செய்து அவையில் இருந்து வெளியேற்றினாலும் கூட அதனை எதிர்த்து போராடி வழக்குகளில் வெற்றி பெற்று மீண்டு வந்துள்ளார். இருப்பினும் அவர் எந்த வகையிலும் பாஜகவினரிடம் வெறுப்பை காட்ட வில்லை’’ என சிவசேனா எம்.பி. பிரியங்கா சதுர்வேதி தெரிவித்துள்ளார். அதேபோல, பறக்கும் முத்தத்திற்கே இந்த நிலை என்றால், மணிப்பூர் பெண்கள் எப்படி உணர்ந்திருப்பார்கள் என நினைத்துப் பாருங்கள் என்று ஐஏஎஸ் அதி காரியான ஷைல்பாலா மார்ட்டினும், பாஜக பெண் எம்.பிக்களை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளார். பாஜக ஆளும் மத்தியப் பிரதேச மாநி லம் போபாலில் உள்ள மாநிலச் செயல கத்தில் பொது நிர்வாகத் துறையில் கூடுதல் செயலாளராக இருக்கும் ஷைல்பாலா மார்ட்டின், டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், (ஜரா சோச்சியே மணிப்பூர் கி மஹிலான் கோ கைசா மஹ்சூஸ் ஹுவா ஹோகா) மணிப்பூர் பெண்கள் எப்படி உணர்ந்திருப்பார்கள் என்பதைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் என பாஜக பெண் எம்.பிக்களுக்கு அறிவுரை வழங்கியுள் ளார். பாஜக பெண் எம்.பிக்கள் மக்கள வை சபாநாயகரிடம் கையெழுத்திட்டு வழங் கிய புகார் கடிதத்தையும்இணைத்துள்ளார். இந்நிலையில், தில்லி மகளிர் ஆணை யத் தலைவர் சுவாதி மாலிவாலும், ஸ்மிருதி இரானிக்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளார். “காற்றில் பறக்கவிடப்பட்ட ஒரு பறக்கும் முத்தம் என்பது பெரும் தீயை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் ஒலிம்பிக் மல்யுத்த வீராங்கனைகளை அறைக்கு அழைத்து அவர்களின் மார்பிலும், இடுப்பி லும் கைவைத்து பாலியல் வன்கொடுமை செய்த பிரிஜ் பூஷன் சரண் சிங் உங்களுக்கு 2 வரிசைக்கு பின்னால் அமர்ந்துள்ளார். அவ ரது செயலில் உங்களுக்கு ஏன் கோபம் வரவில்லை’’ என ஸ்மிருதி இரானியிடம், ஸ்வாதி மாலிவால் காட்டமாக கேட்டுள்ளார்.