புதுதில்லி, நவ. 18 - பல்வேறு நெருக்கடிகளுக்கு இடை யிலும், பொதுத்துறை நிறுவனங்கள் தொடர்ந்து லாபமீட்டி வருகின்றன. இந்த வரிசையில், ‘கோல் இந்தியா’, பவர் கிரிட் கார்ப்பரேசன் லிமிடெட் நிறுவனம் ஆகிய பொதுத்துறை நிறுவனங்களும் 2022-23 நிதியாண்டின் 2-ஆவது காலாண்டில் (ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான 3 மாதத்தில்)- லாபத்தைப் பதிவுசெய்துள்ளன. நாட்டின் மிகப்பெரிய நிலக்கரி உற்பத்தி நிறுவனமான ‘கோல் இந்தியா’ 2022-23 நிதியாண்டின் 2-ஆவது காலாண்டில் ரூ. 6 ஆயிரத்து 044 கோடி லாபம் ஈட்டியுள்ளது. இது முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில் ஈட்டிய லாபத்தைக் காட்டிலும் 106 சதவிகிதம் அதிகமாகும். ‘கோல் இந்தியா’வை போலவே ஒன்றிய அரசுக்குச் சொந்தமான ‘பவர் கிரிட் கார்ப்பரேஷன் லிமிடெட்’ நிறுவனம் ரூ. 3 ஆயிரத்து 650 கோடி நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது 2021-22 நிதியாண்டின் செப்டம்பர் காலாண்டைக் காட்டிலும் 8 சதவிகிதம் அதிகமாகும். இதேபோல பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி ரூ. 15 ஆயிரத்து 952 கோடியை ஒருங்கிணைந்த நிகர லாப மாக ஈட்டி சாதனை படைத்தது. கடந்த 2021-22 நிதியாண்டின் 2-ஆவது காலாண்டில், ஆயிரத்து 433 கோடியை மட்டுமே எல்ஐசி ஒருங்கிணைந்த நிகர லாபமாக ஈட்டி யிருந்த நிலையில், அது 11 மடங்கு அதி கரித்தது. பொதுத்துறை வங்கிகளான ‘ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா’, ரூ. 14 ஆயி ரத்து 752 கோடி ரூபாயையும், இந்தியன் வங்கி ரூ. 1,225 கோடியும், யூகோ வங்கி ரூ. 504 கோடியே 52 லட்சமும் நிகரலாப மாக ஈட்டியுள்ளன.