states

பொதுத்துறை என்டிபிசி நிறுவனம் ரூ.5 ஆயிரத்து 199 கோடி லாபம்!

புதுதில்லி, மே 22- பொதுத் துறையைச் சேர்ந்த மின்  உற்பத்தி நிறுவனமான தேசிய அனல்மின்  கழகம் (National Thermal Power Corpo ration Limited - NTPC) மார்ச் காலாண்டில் ரூ. 5 ஆயிரத்து 199 கோடியே 51 லட்சம் நிகர லாபம் ஈட்டியுள்ளது. 2022 மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் ஈட்டிய வருவாய் விவரங்களை தேசிய அனல்மின் கழகம் பங்குச் சந்தை யிடம் பகிர்ந்து கொண்டுள்ளது.  இதன்படி, முந்தைய ஆண்டுடன் ஒப்பி டுகையில் தேசிய அனல் மின் கழகத்தின்  லாபம் ரூ. 31 ஆயிரத்து 687 கோடியே 24 லட்சத்திலிருந்து ரூ. 37 ஆயிரத்து 724 கோடியே 42 லட்சமாக அதிகரித்துள்ளது. 2021-2022 மார்ச் காலாண்டில் நிகர லாபம் ரூ. 5 ஆயிரத்து 199 கோடியே 51 லட்ச மாக உயர்ந்துள்ளது. முந்தைய 2020-2021 மார்ச் காலாண்டில் ரூ. 4 ஆயிரத்து 649 கோடியே 49 லட்சம் அளவிலேயே என்டிபிசி-யின் நிகரலாபம் இருந்த நிலையில், அது தற்போது 12 சதவிகிதம் அதிகரித்துள்ளது.