states

எம்.பி.க்கள் இடைநீக்கத்தைக் கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம்!

புதுதில்லி, ஜூலை 27 - எதிர்க்கட்சிகளின் போராட்டம் காரண மாக புதன்கிழமையன்று 7-ஆவது நாளாக நாடாளுமன்ற அலுவல்கள் முடங்கின.  விலை உயர்வு, ஜிஎஸ்டி வரி விதிப்பு, பணவீக்கம் உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து விவாதிக்க மோடி அரசு பிடிவாத மாக மறுத்து வருகிறது. இதனைக் கண்டித்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 19 பேரை மாநிலங்களவை யில் இருந்து ஒரு வாரத்திற்கு இடைநீக்கம் செய்தனர். புதனன்று காலை அவை கூடியதுமே, எம்.பி.க்கள் இடைநீக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மாநிலங்களவையில் முழக்கங்களை எழுப்பினர். திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ‘ஜனநாயக படுகொலை’ என்ற வாசகம் அடங்கிய முகக் கவசத்தை அணிந்து நாடாளுமன்றத்துக்கு வந்தனர். இதன் காரணமாக அவையை நடத்த முடி யாததால், நாள் முழுவதும் மாநிலங் களவை ஒத்திவைக்கப்பட்டது. முன்னதாக எம்.பி.க்கள் மீதான சஸ்பெண்ட் உத்தரவைத் திரும்பப் பெறக் கோரி, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு எதிர்க்கட்சிகளின் நாடா ளுமன்ற உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடு பட்டனர். இதில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 23 எம்.பி.க்களும் கலந்து கொண்டனர்.