போபால், மார்ச் 23- தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட காஷ்மீர் இந்து பண்டிட்டுகளின் வலி யை உலகுக்கு காட்டுவதாக கூறி, ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ என்ற திரைப்படத்தை விவேக் அக்னிஹோத்ரி என்பவர் இயக்கியுள்ளார். இந்தப் படம் தற்போது பிரதமர் மோடி, பாஜக முதல்வர்கள் மற்றும் சங்-பரிவாரங்களின் ஆதரவுடன் 2 வாரங்களைக் கடந்து ஓடிக் கொண்டிருக்கி றது. இதுவரை ரூ. 150 கோடிக்கும் அதிகமான தொகை யை வசூலித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், பண்டிட்டுகளின் நலனுக்காக எடுக்கப் பட்ட ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ திரைப்படம் அபரிமிதமான வரு வாயை ஈட்டும் நிலையில், அந்த வருவாயை காஷ்மீர் பண்டிட் குழந்தைகளின் கல்விக்கு வழங்குவது பொருத்த மாக இருக்கும் என்று மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி நியாஸ் கான் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ‘‘காஷ்மீர் பைல்ஸ் பட வருவாய் ரூ. 150 கோடியை எட்டியுள்ளது. காஷ்மீர் பிராமணர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து பெரிய மனிதர்கள் குரல் கொடுக்கிறார்கள். இந்நிலையில், பிராமணர்களின் குழந்தைகள் கல்வி செல வுக்காகவும் காஷ்மீரில் அவர்கள் வீடு கட்டவும் காஷ்மீர் பைல்ஸ் படத்தின் வருவாயை வழங்கலாம். இது பேருதவி யாக இருக்கும்’’ என்று குறிப்பிட்டுள்ளார். ஐஏஎஸ் அதிகாரி நியாஸ் கானின் இந்த கருத்தால், அதிர்ச்சியடைந்த ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ பட இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி, ‘‘ஐஏஎஸ் அதிகாரி நியாஸ் கானை சந்திக்க நேரம் ஒதுக்க வேண்டுகிறேன். அவர் பல்வேறு புத்தகங்களை எழுதியுள்ளார். அதன்மூலம் அவருக்கு கிடைத்த வருவாயை நன்கொடையாக வழங்குவது குறித்தும், ஐஏஎஸ் அதிகாரிக்கான சிறப்பு அதிகாரம் மூலம் எவ்வாறு உதவி செய்யலாம் என்பது குறித்தும் அவரோடு ஆலோசிக்க விரும்புகிறேன்’’ என்று தனது கடுப்பை வெளிப்படுத்தியுள்ளார்.