இமாச்சலப்பிரதேச மாநிலத்தின் முக்கிய சுற் றுலாத்தளங்களில் ஒன்றான தர்மசாலாவில் ஒன்றிய நீர்வளத்துறை அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் சுவர்களில் மர்மநபர் கள் “காலிஸ்தான் வாழ்க (Khalistan Zindabad)” என்று ஸ்பிரே பெயிண்ட் மூலம் எழுதியுள்ளனர். தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று சுவரில் இருந்த வாசகத்தை அழித்தனர். மேலும் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர். பதற்றம் இந்தியாவில் 13-ஆவது சீசன் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் இமாச்சலப்பிரதேச மாநி லத்தின் தர்மசாலாவில் 5 போட்டிகள் நடை பெறவுள்ளன. சிலநாட்டு கிரிக்கெட் வீரர்கள் அங்கு தங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலை யில், காலிஸ்தான் ஆதரவு வாசகம் தீட்டப்பட்டுள்ள தால் தர்மசாலாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.