புதுதில்லி, செப்.16- பிரதமர் நரேந்திர மோடியின் நூல் வெளியீட்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டும், தில்லியில் நடைபெற்ற விழாவில் பங்கேற்பதை இளையராஜா தவிர்த்துள்ளார். ‘புளூ கிராப்ட் டிஜிட்டல் பவுண்டேஷன்’ என்ற நிறுவனம் “அம்பேத்கர் மற்றும் மோடி -சீர்திருத்த வாதியின் சிந்தனையும், செயல்வீரரின் நடவடிக்கை யும்” (Ambedkar and Modi - Reformer’s ideas, Performer’s implementation’) என்ற நூலை பதிப்பித்து இருந்தது. இந்த நூலுக்கு புகழ்பெற்ற இசையமைப்பாளர் இளையராஜாவின் அணிந்துரையையும் ‘புளூ கிராப்ட் டிஜிட்டல் பவுண்டேஷன்’ பெற்றிருந்தது. “அம்பேத்கரும், பிரதமர் மோடியும் ஏழ்மையையும் ஒடுக்குமுறையையும் அனுபவித்த வர்கள். இருவருமே அதனை ஒழிக்கப்பாடுபட்டனர்” என்று அணிந்துரையில், அண்ணல் அம்பேத்க ரோடு பிரதமர் மோடியை ஒப்பிட்டு இளையராஜா பாராட்டியிருந்தார். மேலும், “பிரதமர் மோடி ஆட்சியின் பல திட்டங்கள், அம்பேத்கரின் சிந்தனையை அடிப்படை யாக கொண்டவை. பெண்கள், விளிம்பு நிலை மக்க ளுக்கான பல திட்டங்களை மோடி அரசு செய்துள் ளது’ ’ என்று கூறியிருந்ததுடன், “முத்தலாக் தடைச் சட்டம் உள்ளிட்டவை மூலம் சமூக மாற்றம் நிகழ்ந்துள்ளது. அம்பேத்கர் இருந்தால் இதனை நினைத்து பெருமைப்பட்டிருப்பார்” எனவும் சம்பந்த மே இல்லாமல் இளையராஜா குறிப்பிட்டிருந்தார். அம்பேத்கருக்கு இணையாக, மோடியை ஒப்பிடும் இளையராஜாவின் கருத்துக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்தது. சனாதன எதிர்ப்பு போராளியை, சனாதன கூட்டத்தின் பிரதிநிதியோடு ஒப்பிடுவதா? என்று பலரும் அவருக்கு கண்டனம் தெரிவித்தனர்.
ஆனால், இளையராஜா தனது கருத்தை ஒருபோதும் திரும்பப் பெற மாட்டேன் என- தனது சகோதரரும் பாஜக-வில் இருப்பவருமான கங்கை அமரன் மூலம் உறுதியாக கூறி விட்டார். இதையடுத்து இளையராஜாவே, ஏதோ ஆதா யத்தை எதிர்பார்த்து பிரதமர் மோடியை பாராட்டி யிருக்க வேண்டும்; அல்லது எதையோ காட்டி இளையராஜாவை பாஜக மிரட்டியிருக்க வேண்டும் என்று பலர் சந்தேகங்களை எழுப்பினர். அதற்கேற்பவே, ரூ.1 கோடியே 87 லட்சம் வருமான வரி பாக்கி வைத்துள்ள விவகாரத்தில், இளையராஜாவுக்கு இறுதி எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருந்தது, ஊடகங்களில் வெளி யானது. அடுத்த சில வாரங்களில் இளையராஜா மாநிலங்களவை உறுப்பினராகவும் நியமிக்கப் பட்டார். இது மீண்டும் விவாதங்களை கிளப்பியது. இதனிடையே, இளையராஜா முன்பு அணிந்துரை எழுதிய “அம்பேத்கரும் மோடியும்” நூல் வெளியீட்டு விழா தில்லி நேரு அருங்காட்சியகத்தில் ஒன்றிய அரசின் தகவல் ஒலிபரப்புத்துறை சார்பில் வெள்ளி யன்று நடைபெற்றது. இந்த விழாவிற்கு குடியரசு முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்த், உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், இசை யமைப்பாளர் இளையராஜா ஆகியோர் சிறப்பு விருத்தினர்களாக அழைக்கப்பட்டிருந்தனர். அதன்படி உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் விழாவை தொடங்கி வைத்தார். குடியரசு முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்த் “அம்பேத்கரும் மோடியும்” நூலை வெளி யிட ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்குர் பெற்றுக் கொண்டார். விழாவில் ஒன்றிய அமைச்சர் எல்.முருகன், நடிகை குஷ்பு உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆனால், நூல் அணிந்துரைக்கே கடும் எதிர்ப்பைச் சந்தித்த இசையமைப்பாளர் இளையராஜா, மூன்று சிறப்பு விருந்தினர்களில் ஒருவராக அழைக்கப்பட்டிருந்தும் ஏனோ நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளாமல் தவிர்த்துள்ளார்.