முப்படை தளபதிகளுடன் பிரதமர் ஆலோசனை
இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் முடிவடைந்த நிலையில், ஞாயிற் றுக்கிழமை காலை நாட்டின் பாது காப்பு நிலவரம் குறித்து முப்படை தலை மைத் தளபதிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல், முப்படைத் தளபதி அனில் சவுகான், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய் சங்கர், செயலர் விக்ரம் மிஸ்ரி உள் ளிட்டோர் பங்கேற்றனர்.
ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தானில் இயல்புநிலை திரும்பியது
இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் எல்லை யில் அமைந்துள்ள ஜம்மு-காஷ்மீர், பஞ் சாப், ராஜஸ்தான், குஜராத் மாநிலங்க ளில் இயல்புநிலை திரும்பியது. ஜம்மு-காஷ்மீரின் சம்பா மாவட்டத் தைச் சேர்ந்த ஜிதேந்தர் சிங், “இரவு முழு வதும் எந்தக் குண்டு வெடிப்புச் சம்ப வங்களும் பதிவாகவில்லை” என்று சிரித்த முகத்தோடு கூறினார். மேலும் குப் வாரா, பூஞ்ச், உரி உள்ளிட்ட ஜம்மு-காஷ்மீரின் மற்ற பகுதிகளிலும் அமைதி யான சூழ்நிலையே நிலவியது. இதே போல் பஞ்சாப்பின் பெரோஸ்பூர் மற்றும் பதான்கோட்டிலும் இயல்புநிலை திரும் பியதோடு சாலைகளில் மக்கள் நடமாட் டம் காணப்பட்டது. ராஜஸ்தானில் கட்டுப் பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால் அங்கு இயல்புநிலை திரும்பியுள்ளது.
பத்மநாப சுவாமி கோவிலில் 12 பவுன் தங்கம் திருட்டு
திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலில் இருந்து சுமார் 12 பவுன் தங்கம் திருடப்பட்டதாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கோவில் வாயில் கட்டுமானத்திற்காக நன்கொடையாக வழங்கப்பட்ட தங்கம் திருடப்பட்டது. தங் கம் கோவில் லாக்கரில் வைக்கப்பட்டி ருந்த நிலையில், அவை திருடப்பட்டதா கப் புகாரில் கூறப்பட்டுள்ளது. இந்தச் சம்ப வம் குறித்து கோட்டை காவல்துறை யினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவிலின் அனைத்துப் பகுதிகளி லும் சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளதால் வெளியில் இருந்து திருடர்கள் யாரும் நுழைய வாய்ப்பில்லை எனவும், விரை வில் கண்டுபிடிக்கப்படும் எனவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.