தில்லி அரசின் அதிகாரிகளை நிய மனம் மற்றும் இடமாற்றம் செய்ய தில்லி அரசுக்கே அதிகாரம் இருப்பதாக கடந்த ஏப்ரல் மாதம் உச்சநீதிமன்றம் தீர்ப்ப ளித்தது. இந்த தீர்ப்பை மீறி அதை நீர்த்துப் போக செய்யும் வகையில் கடந்த மே மாதம் ஒன்றிய பாஜக அரசு அவசர சட்டம் ஒன்றை கொண்டு வந்தது. அவசர சட்டத் தில் தில்லி அரசின் குரூப்-4 அதிகாரிகள் நியமனம் மற்றும் இடமாற்றம் குறித்த இறுதி அதிகாரம் துணைநிலை ஆளு நருக்கே என்று கூறப்பட்டது. இந்த அவ சரச் சட்டத்தை கொண்டு வரும் வகை யில் தில்லி நிர்வாக திருத்த மசோதாவை சட்டமாக்கும் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி ஒன்றிய அரசு நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறை வேற்றியது. நாடாளுமன்றத்தில் நிறை வேறிய மசோதா ஜனாதிபதி ஒப்பு தலுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலை யில், திருத்த மசோதாவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு சனியன்று ஒப்புதல் அளித்துள்ளார். இதன் மூலம் மசோதா சட்டமாகிவிட்டது. சட்டம் அமலுக்கு வந்த நிலையில் இனி தில்லியில் பணி புரியும் குரூப்-4 அதிகாரிகள் நியமனம் மற்றும் இடமாற்றம் குறித்த இறுதி அதி காரம் துணைநிலை ஆளுநர் சக்சேனா விடம் சென்றுள்ளது.