11-ஆம் வகுப்பு தேர்வு எழுதி ரிசல்ட்டுக்காக காத்துக் கொண்டிருக்கும் 16 வயதான தமிழ்நாட்டின் பிரக்ஞானந்தாவுக்கு நாட்டின் முதன்மையான பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் நிறுவனம் வேலை வழங்கவுள்ளதாக செய்தி வெளியாகி யுள்ளது. தற்போது பிரக்ஞானந்தாவுக்கு வெறும் 16 வயது தான் ஆகிறது என்பதால் 18 வயது நிரம்பிய பின்பு அவருக்கு வழங்கப்படும் வேலை குறித்து முறையான அறிவிப்பு வெளியிடப்படும் என இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ள்ளது.