கடந்த ஜூலை மாதம் மகாராஷ் டிரா மாநிலம் புனேவின் கொத் ருடு பகுதியில் இருசக்கர வாக னம் ஒன்றை திருடிச் செல்ல முயன்றதாக பொறியாளர் ஷாநவாஸ் புனே போலீசாரால் கைது செய்யப்பட் டார். திடீரென போலீ சார் பிடியில் இருந்து அவர் தப்பியதாக கூறப்பட்டது. இந்த வழக்கு என்ஐஏ-க்கு மாற்றப்பட்ட நிலை யில், ஷா நவாஸ் மற்றும் கூட்டாளிகள் என 3 பேரும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு டன் தொடர்புடையவர்கள் என்றும், அவர் கள் குறித்து தகவல் அளித்தால் தலா 3 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என என்ஐஏ சமீபத்தில் அறிவித்திருந்தது. இந்நிலையில் 3 மாத இடை வெளிக்குப் பின்னர் தில்லி பகுதியின் ஒரு மறைவிடத்தில் பதுங்கி இருந்த போது ஷா நவாஸ் மற்றும் கூட்டாளிகள் என 3 பேரை தில்லி சிறப்பு பிரிவு போலீசார் திங்களன்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மூவரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. அவர்களிடமி ருந்து ஐஇடி வெடி தயாரிக்கக்கூடிய திர வம் உட்பட பல பொருள்கள் கைப்பற்றப் பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ள னர்.