புதுதில்லி, ஜூலை 1- புதிய தொழில் நிறுவனங்களின் 2 செயற்கைக் கோள்களை வெற்றிகரமாக செலுத்தியதற்கு இஸ்ரோவுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரி வித்துள்ளார். ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு 2-ஆவது ஏவுதளத்தில் இருந்து திட்டமிட்டபடி வியாழ னன்று மாலை 6 மணி 2 நிமிடத்தில் பி.எஸ்.எல்.வி. சி-53 ராக்கெட்டை இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. ராக்கெட்டில் வணிக ரீதியாக சிங்கப்பூரைச் சேர்ந்த 365 கிலோ எடை கொண்ட டிஎஸ்-இஓ செயற்கைக்கோள், 155 கிலோ எடை கொண்ட நியூசர் செயற்கைக்கோள், 2.8 கிலோ எடை கொண்ட ஸ்கூப் - 1 செயற்கைக்கோள் என 3 செயற்கைக்கோள்களும் விண்ணில் ஏவப்பட்டன.
ராக்கெட் விண்ணில் ஏவப்பட்ட 18 நிமிடம் 10 வினாடிகளில் 570 கி.மீ தூரத்தில் முதன்மை செயற்கைக்கோளான டிஸ்-இஓ செயற்கைக் கோளும், 19 நிமிடம் 20 வினாடிகளில் நியூசர் செயற்கைக்கோளும், 19 நிமிடம் 22 வினாடி களில் ஸ்கூப் 1 செயற்கைக்கோளும் இலக்கில் திட்டமிட்டபடி நிலைநிறுத்தப்பட்டன. இந்த நிலையில் இஸ்ரோவை பாராட்டும் வகையில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘‘இந்தியாவின் புதிய தொழில் நிறுவனங்களின் 2 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக செலுத்தி பி.எஸ்.எல்.வி. சி-53 மிஷன் சாதனை படைத்துள்ளது. இதற்கு எனது பாராட்டுக்கள். எதிர்காலத்தில் மேலும் பல இந்திய நிறுவனங்கள் விண்வெளியை எட்டும்’’ எனத் தெரிவித்துள்ளார்.