புதுதில்லி, ஜூலை 31- பிரதமர் மோடி மணிப்பூர் விவகாரம் தொடர்பாக “மணிப்பூர் கி பாத்” பேச வேண் டும் ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் கோரிக்கை விடுத்துள்ளார். மணிப்பூர் வன்முறை குறித்து பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்காமல் ஓடி ஒளிவதால் தொடர்ந்து இரு அவைகளும் முடங்கியுள்ளன. இந்நிலையில், ஒவ்வொரு வாரமும் ஞாயிறன்று மனதின் குரல் (மன் கி பாத்) என்ற பெயரில் பிரதமர் மோடி நடத்தும் நிகழ்வை கைவிட்டு மணிப்பூர் விவகாரம் தொடர்பாக “மணிப்பூர் கி பாத்” பேச வேண்டும் என ஆம் ஆத்மி எம்பி கூறியுள்ளார். “சாக்கடை வாயுவில் இருந்து தேநீர் தயா ரிக்கும் அளவிற்கு பிரதமர் மோடி மிகவும் அறிவு மிக்கவர். அவரை இஸ்ரோ விஞ் ஞானி, ரயில்வே பொறியாளர் பணியில் கூட பணியாற்ற வைக்கலாம். ஆனால் மனதின் குரல் மூலம் (மன் கி பாத்) மூலம் பேசப்படும் முட்டாள்தனமான பேச்சை (மன் கி பக்வாஸ்) அவர் நிறுத்த வேண்டும். உண்மை யாக “மணிப்பூர் கி பாத்” என்பதற்குப் பதிலாக பிரதமர் மோடி “மன் கி பாத்” மூலம் தேவை யில்லாததை பேசி வருகிறார்” என ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் கடுமையாக விமர்சித்துள்ளார். இது இரட்டை இயந்திரம் கொண்ட அரசா? “பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநி லத்தில் மாற்றுத் திறனாளி ஒருவரை அம் மாநில போலீசார் தாக்கும் வீடியோ வைர லாகி வருகிறது. மக்களை பாதுகாக்க வேண்டிய போலீசார் மூலம் இவ்வளவு கொடு மையான சம்பவம் அரங்கேறி வருகிறது. இதுதான் இரட்டை இயந்திரம் கொண்ட அரசா?” என ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.