உத்தரப் பிரதேச சட்ட மேலவைக்கு மனுத் தாக்கல் செய்தி ருந்த சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் உதய்வீர் சிங், ராகேஷ் யாதவ் ஆகியோரின் வேட்பு மனு போதிய விவரங்கள் இல்லை என்று கூறி தள்ளுபடி செய் யப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்த 2 இடங்களில் பாஜக போட்டியின்றி வெல்வ தற்கான வழிவகை ஏற்பட்டுள்ளது. இதனை சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் கண்டித்துள்ளார். ‘‘பாஜக ஆட்சியில் ஜன நாயகத்தை எதிர்பார்ப்பது, பகல் வானத்தில் விண்மீன்களைத் தேடுவது போலாகும்” என்று அவர் கூறியுள்ளார்.