தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரும், ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன் கல் யாண், ஆந்திர மாநி லத்தில் கடந்த தேர்தல் களில் பாஜக தலைமை யிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் (என்டிஏ) இணைந்து போட்டியிட் டார். வரவிருக்கும் நாடா ளுமன்ற தேர்தலிலும் அவர், என்டிஏ போட்டியிடுவார் என தகவல் வெளியாகிய நிலையில், திடீ ரென என்டிஏ கூட்டணியில் இருந்து வெளி யேறுவதாகவும், தெலுங்கு தேசம் கட்சி உடன் கூட்டணி சேர்ந்து அரசியலில் பய ணிக்க உள்ளதாக அறிவித்துள்ளார். தெலுங்கு தேசம் கட்சியும், ஜனசேனா வும் ஒன்றாக இணைந்தால் மாநிலத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி மூழ்கி விடும் என கிருஷ்ணா மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசியுள்ளார். தமிழ்நாட்டில் கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறிய சில நாட்களில் ஆந்திராவில் முக்கிய கட்சியாக இருக் கும் ஜனசேனாவும் வெளியேறி இருப்பது பாஜகவுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.