states

img

விமானத்திற்குள் மழைநீர்: நடுவானில் தத்தளித்த பயணிகள்

பொதுத்துறை நிறுவன மான “ஏர் இந்தியா”  விமான நிறுவனம்  கடந்த 2022இல் டாடா தனியார் குழு மத்திற்கு தாரைவார்க்கப்பட்டது. டாடா கையில் சென்ற நாள்முதல் “ஏர்  இந்தியா” விமான சேவை தொடர் பாக பல்வேறு சர்ச்சைகள், புகார்கள்  எழுந்து வருகின்றன. சமீபத்தில் கூட  பயணிகளுக்கான சேவை விதிகளை  மீறியதற்காக சமீபத்தில் ஏர் இந்தியா  நிறுவனத்திற்கு சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் 10  லட்சம் ரூபாய் அபராதமாக விதித்து  இருந்தது. இந்நிலையில், தில்லி விமான நிலையத்தில் இருந்து இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள கேட்  விக் விமான நிலையம் நோக்கி பறந்து கொண்டு இருந்த ஏர் இந்தியா  போயிங் பி 787 ட்ரீம்லைனர் விமா னத்தின் மேல்நிலை சேமிப்புப் பகுதி யில் இருந்து கேபினுள் மழைத்தண் ணீர் கசிந்ததால், விமானமே வெள்  ளக்காடாக மாறியது. மழைத் தண்  ணீர் தொடர்ந்து கசிந்ததால் விமானம்  விபத்தில் சிக்கிவிடுமோ என்ற அசு சுத்துடன் பயணம் செய்துள்ளனர்.  இது தொடர்பான வீடியோ சமூக  வலைத்தளத்தில் வைரலாகி வரும்  நிலையில், ஏர் இந்தியா நிறுவனது துற்கு நெட்டிசன்கள் கண்டனம் தெரி வித்து வருகின்றனர்.