states

ஜம்மு-காஷ்மீர் பட்ஜெட் நிறைவேறியது

புதுதில்லி, மார்ச் 21 - நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு கள், மார்ச் 13 அன்று தொடங்கின.  எனினும், இதுவரை நாடாளுமன்றத் தின் இரு அவைகளிலும் அலுவல்கள் நடைபெறாமல் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வருகிறது.  செவ்வாயன்று காலை 11 மணிக்கு  மக்களவை கூடியதும் சபாநாயகர் ஓம் பிர்லா கேள்வி நேரத்தை தொடங்க  முயன்றார். அப்போது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சபையின் மைய பகு திக்கு வந்து அதானி விவகாரத்தில் “எங்களுக்கு கூட்டுக்குழு விசாரணை தேவை” என்று கோரிக்கை விடுத்தனர்.  அப்போது, “பட்ஜெட் தொடர் முக்கியமானது. ஒவ்வொருவருக்கும் பேச வாய்ப்பு வழங்கப்படும். இதனால் அமைதியாக இருங்கள்” என்று சபா நாயகர் ஓம் பிர்லா கூறினார். எனினும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தங்களின் கோரிக்கையை வலியுறுத்திய நிலை யில், மக்களவையை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைத்தார்.  அதேநேரம் மாநிலங்களவையில், ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறி ஆளும் பாஜக எம்.பி.க்கள் கோஷமிட்டனர். பதி லுக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அதானி விவகாரத்தை கிளப்பினர். இதனால் ஏற்பட்ட அமளி காரணமாக மாநிலங்களவையும் 2 மணி வரை அவை ஒத்தி வைக்கப்பட்டது.  பிற்பகலில் அவை நடவடிக்கை கள் துவங்கியபோது, மீண்டும் கூச்சல், குழப்பம் அமளி ஏற்படவே,  யுகாதி, குடி பவா உள்ளிட்ட பல்வேறு பண்டிகைகளை முன்னிட்டு  மாநிலங்களவையை மார்ச் 23 காலை வரை ஒத்திவைத்து மாநிலங்கள வைத் தலைவர் ஜகதீப் தன்கர் உத்தர விட்டார்.

மக்களவை பிற்பகலில் கூடிய போது, அவையை நடத்திய ராஜேந்திர  அகர்வால், பாஜக-வின் ஜூகல் கிஷோர் சர்மாவிடம் ஜம்மு - காஷ்மீர் யூனியனுக்கான பட்ஜெட் தாக்கலுக்கான நடைமுறைகளைத் தொடங்குமாறு கோரினார். சர்மா  ஒரு நிமிடம் பேசிய பின்னர் பட்ஜெட் தாக்கலுக்கான நடைமுறைத் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து அமளிகளுக்கு மத்தியில், ஜம்மு -காஷ்மீருக்கான, ரூ. 1.11 லட்சம் கோடி மதிப்பிலான பட்ஜெட் குரல்  வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப் பட்டது.  அதனைத் தொடர்ந்து இன்னும்  சில அலுவல்கள் நடைபெற ஒத்து ழைத்து அமைதியாக இருக்கும்படி அவையை நடத்திய ராஜேந்திர அகர்வால் உறுப்பினர்களை கேட்டுக்  கொண்டார். ஆனாலும், உறுப்பினர் கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட தால் மக்களவையும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. முன்னதாக செவ்வாயன்று நாடா ளுமன்றம் கூடியதும், நாடாளுமன்ற கட்டடத்தின் முதல் மாடிக்குச் சென்ற எதிர்க்கட்சி எம்.பிக்கள் அங்கு  இருந்தபடி போராட்டத்தில் ஈடுபட்ட னர். நாடாளுமன்றக் கூட்டுக் குழு அமைக்க வலியுறுத்தும் பதாகை களை கைகளில் ஏந்தியபடியும், அதே கோரிக்கையை வலியுறுத்தும் மிகப் பெரிய பேனரை கீழே தொங்கவிட்ட படியும் அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.