இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தின் ஹமாஸ் இயக்கத்தினர் ஏவு கணை தாக்குதல் நடத்தியதற்கு பதிலடி என்ற பெய ரில், இஸ்ரேல் ராணு வம் பாலஸ்தீனம் மீது ‘போர்’ அறிவித்து பயங்கர தாக்குதல் நடத்தி வருகிறது. இந் நிலையில், மேகா லயா மாநிலங்க ளவை எம்பியான ஹர் லோகி, அவரது குடும்பத்தினர் உட்பட 27 பேர் இஸ்ரேல் பெத்லகேமில் சிக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. போர் பதற்றம் கார ணமாக இந்தியா - இஸ்ரேல் இடையி லான ஏர் இந்தியா விமான சேவையை ரத்து செய்துள்ளதால், நாடு திரும்ப முடி யாமல் ஹர் லோகி குடும்பத்தினர் தவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இஸ்ரேலில் பணியாற்றி வரும் சுமார் 20,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் அடுத்து என்ன செய்வது என தெரியா மல் ‘பாதுகாப்பான இடங்களில்’ தவித்து வருகின்றனர்.