states

img

முஷாரப் மரணம்

துபாய், பிப்.5-  பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதியும் ராணுவத் தளபதியு மான பர்வேஷ் முஷாரப் உடல் நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 79. பர்வேஸ் முஷாரப் நீண்ட நாட்களாக அமிலாய்டோ சிஸ் (உறுப்புகளில் அசாதாரண புரதம் உருவாகி இயல்பான செயல்பாட்டை தடைசெய்யும் போது  ஏற்படும் அரிதான நோய்) நோயினால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பிப்ரவரி 5 ஞாயிறன்று துபாயில் உள்ள அமெரிக்க மருத்துவமனையில் காலமானார்  என்று பாகிஸ்தானின் ஜியோ நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. 1999-ஆம் ஆண்டு முதல் 2008-ஆம் ஆண்டு வரை பாகிஸ்தானை ஆட்சி செய்தவர் முஷாரப்.பின்னர் இவர் மீது தேச துரோகக் குற்றம் சாட்டப்பட்டது. 2019-ஆம்  ஆண்டு அரசியலமைப்பை முடக்கியதற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் அவரது மரண தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது. முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோ படுகொலை வழக்கு மற்றும் ரெட் மசூதி மதகுரு கொலை வழக்கில்  முஷாரப் தப்பியோடிய குற்றவாளியாக அறிவிக்கப் பட்டார். 2016-ஆம் ஆண்டு மார்ச் மாதம் மருத்துவச் சிகிச்சை பெறுவதற்காக பாகிஸ்தானிலிருந்து முஷாரப் வெளியேறி துபாய் சென்றார். பின்னர் அங்கேயே அவர் தங்கிவிட்டார்.