states

எங்கள் வாக்கு சின்ஹாவுக்கே! ஆம்ஆத்மி அறிவிப்பு

புதுதில்லி, ஜூலை 16- ஜூலை 18 அன்று நடைபெறவுள்ள குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பா ளர் யஷ்வந்த் சின்ஹாவை ஆதரித்து வாக்க ளிக்கப் போவதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. கூட்டத்தில் கட்சியின் மூத்த தலைவர்கள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங், அதிஷி, துர்கேஷ் பதக், பஞ்சாப் நாடாளு மன்ற உறுப்பினர் ராகவ் சதா மற்றும் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தின் முடிவு குறித்துப் பேசிய சஞ்சய் சிங், “நாங்கள் திரௌபதி முர்முவை மதிக்கிறோம், ஆனால் நாங்கள் யஷ்வந்த் சின்ஹாவுக்கு வாக்களிப்போம்” என்றார்.