புதுதில்லி, மார்ச் 17 - அதானி ஊழலை திசைத்திருப்பும் வகையில், ராகுலின் லண்டன் உரைக்காக அவரை மன்னிப்புக் கேட்கச் சொல்லி, பாஜகவினர் நடத்திவரும் அமளியால் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் 5-ஆவது நாளாக முடங்கியது. மேலும், இரண்டு அவைகளும் வரும் திங்கள்கிழமை வரை ஒத்திவைக்கப் பட்டன. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொட ரின் இரண்டாவது கட்ட அமர்வுகள் கடந்த மார்ச் 13 அன்று துவங்கி நடைபெற்று வரு கின்றன. இதில், முதல் நாளே, அதானி குழு மத்தின் ரூ. 17 லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் முறைகேடுகள் குறித்து நாடா ளுமன்றக் கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று எதிர்க்கட்சி கள் வலியுறுத்தின. ஆனால், அதானி தொடர்பான இந்த ஊழல் விவகாரம் விவாதத்திற்கு வந்து விடக் கூடாது என்பதற்காகவே அதனைத் திசைத்திருப்பும் வகையில், அந்நிய மண் ணில் (லண்டனில்) இந்தியாவை ராகுல் காந்தி அவமானப்படுத்தி விட்டார்
என்றும், இதற்காக ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் ஆளும் பாஜக எம்.பி.க்கள் ரகளையில் இறங்கினர். ஒரு நாள், இருநாள் என்றில்லாமல், மார்ச் 13, 14, 15, 16 என கடந்த நான்கு நாட்களும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளை யும் முடக்கிய பாஜக-வினர், வெள்ளிக்கிழ மையன்றும் 5-ஆவது நாளாக நாடாளு மன்ற செயல்பாட்டை முடக்கினர். வெள்ளியன்று காலை கேள்வி நேரத்து டன் மக்களவை தனது அலுவலைத் தொடங்கியது. அப்போது அதானி ஊழல் விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை எங்கே? என்ற கேள்வியை முன்வைத்து, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கங்களை எழுப்பினர். அப்போது, மக்களவையில் திடீரென ஆடியோ துண் டிக்கப்பட்டது. மேலும் ராகுலை மன்னிப்பு கேட்கச் சொல்லி பாஜக எம்.பி.க்கள் அமளி யில் ஈடுபட்டனர். இதனால் மக்களவை ஒத்தி வைக்கப்பட்டது.
மாநிலங்களவையில், அவைத் தலை வர் ஜக்தீப் தன்கர், கன்னட நடிகரும், எம்.பி.யுமான ஜக்கேஷ்-க்கு பிறந்தநாள் வாழ்த்துக்களோடு அவை நடவடிக்கை களை துவங்கினர். அதன்பிறகு வழக் கம்போல ஆளும் கட்சி மற்றும் எதிர்க் கட்சி உறுப்பினர்களின் அமளியால் மாநி லங்களவை ஒத்திவைக்கப்பட்டது. நாடாளுமன்ற அமளி குறித்து பேசிய மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி “பாஜகவினர் ஏன் அங்கும் இங்கும் பேசுகிறார்கள், நாடாளுமன்றத் தில் விவாதம் நடத்தலாமே, எதற்காக பயப் படுகிறார்கள்? ராகுல் காந்தியைக் கண்டு பாஜக பயப்படுகிறது. பிரதமர் மோடியின் 56 அங்குல மார்பு தற்போது சுருங்கி விட்டதா?” என்று சாடினார். இரண்டு அவைகளும் ஒத்திவைக் கப்பட்ட நிலையில், அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்ற தங்களின் கோரிக் கையை வலியுறுத்தி எதிர்க்கட்சி உறுப்பி னர்கள் நாடாளுமன்றத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு அருகில் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர்.
பாஜகவினர்தான் தேசவிரோதிகள்: கார்கே அதைத்தொடர்ந்து தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு மல்லிகார்ஜூன கார்கே பேட்டி அளித்தார். பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா பேசுகையில், “ராகுல் காந்தி தேசவிரோதிகளின் நிரந்தர கருவியாக மாறி விட்டார்” என்று விமர்சித்திருந்தார். அதற்கு பதிலளித்த கார்கே, “அவர்கள்தான் (பாஜக) தேச விரோதிகள். அவர்கள் யாரும் இந்திய சுதந்திர போராட்டத்தில் பங்கேற்கவில்லை. ஆனால் மற்றவர்களை அவர்கள் தேச விரோ திகள் என்று தூற்றுவார்கள். வேலை வாய்ப்பின்மை, பணவீக்கம் போன்ற பிரச்ச னைகளில் இருந்து மக்களை திசைத் திருப் பவே அவர்கள் இதனைச் செய்கிறார்கள். ராகுல் காந்தி தேச விரோதியாக இருக்க முடியுமா? ஜனநாயகத்தைப் பற்றி விவா திப்பவர்கள் எல்லாம் தேச விரோதிகளா? ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் பேசு வதற்கு அவர்கள் ஏன் வாய்ப்பு அளிக்க வில்லை” என்று கேள்வி எழுப்பினார்
மோடி மீது உரிமை மீறல் நோட்டீஸ்
கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பிரதமர் நரேந்திர மோடி பேசியபோது, சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகி யோரை அவமதிக்கும் விதமாக இழிவாகப் பேசியதாகக் குற்றம் சாட்டி, காங்கிரஸ் கட்சி யின் அமைப்பு பொதுச்செயலாளரும், மாநி லங்களவை எம்.பியுமான வேணுகோபால் சிறப்புரிமை தீர்மானத்தை மாநிலங்களவை யில் வெள்ளியன்று தாக்கல் செய்தார். இது தொடர்பாக மாநிலங்களவைத் தலைவர் ஜகதீப் தன்கருக்கு அவர் எழுதியுள்ள கடி தத்தில் கடந்த பிப்ரவரி 9 அன்று நாடாளு மன்றத்தில் பேசிய பிரதமர் மோடியின் உரை யை அவர் மேற்கோள் காட்டியுள்ளார்.