புதுதில்லி, செப். 22 - மகளிர்க்கு நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் 33 சதவிகித இடஒதுக்கீடு வழங்கும் அரசியலமைப்புச் சட்ட த்தின் 128-ஆவது திருத்த மசோதா, மக்கள வையைத் தொடர்ந்து மாநிலங்களவையிலும் வியாழனன்று நிறைவேறியது. ‘நாரி சக்தி வந்தன் அதினியம்’ (மகளிருக்கு அதிகாரம் அளிக்கும் சட்டம்) என்று பெய ரிடப்பட்ட இந்த மசோதாவை ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் மாநிலங் களவையில் தாக்கல் செய்த நிலையில், இதன் மீதான விவாதம் காலை துவங்கி இரவு வரை சுமார் 11 மணி நேரம் நடைபெற்றது. பாஜக, காங்கிரஸ், இடதுசாரிகள், திமுக, ஆர்ஜேடி, ஜேடியு, என்சிபி, திரிணாமுல், சமாஜ்வாதி என அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த உறுப்பினர்கள் - குறிப்பாக பெண் உறுப் பினர்கள் விவாதத்தில் கலந்துகொண்டுபேசினர். மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை கொள்கை அளவில் ஆதரிப்பதாகவும், எனினும் இதனை நடைமுறைப்படுத்துவதற்கு, மக்கள் தொகைக் கணக்கெடுப்பு, தொகுதி மறுவரையறை ஆகியவற்றை நிபந்தனை களாக விதித்திருப்பதும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்புப் பெண்கள், முஸ்லிம் பெண்களுக்கும் உள்ஒதுக்கீடு வழங்காமல் இருப்பதும், மகளிர் இடஒதுக்கீட்டில் ஒன்றிய பாஜக அரசுக்கு உண்மையான விருப்பம் இல்லை என்பதையே காட்டுகிறது என்று விவாதத்தின் போது அவர்கள் குறிப்பிட்டனர்.
மேலும், தற்போதுள்ள நிலையில், மகளிர் இடஒதுக்கீடு நடைமுறைக்கு வர சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாகும் என்பதால், இந்த மசோதா 2024 தேர்தலுக்காக மக்களை ஏமா ற்றும் ஒரு தந்திரம் என்றும் குற்றம் சாட்டினர். எனினும், இறுதியாகப் பேசிய பிரதமர் மோடி, இந்த மசோதாவை ஒரு மனதாக நிறை வேற்றித்தருமாறு உறுப்பினர்களுக்கு கோரிக்கை விடுத்தார். அதைத் தொடர்ந்து இந்த மசோதா வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது. அதில், மசோதாவிற்கு ஆதரவாக 214 வாக்குகள் கிடைத்தன. எதிராக ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை. முன்னதாக மக்களவையில் ஆதரவாக 454 வாக்குகளும், எதிராக 2 வாக்கு களும் பதிவாகியிருந்த நிலையில், மாநிலங் களவையில் எதிர்ப்பே இன்றி ஒருமனதாக மசோதா நிறைவேறியது. இவ்வாறு மகளிர்க்கான 33 சதவிகித இடஒதுக்கீடு மசோதா மக்களவை, மாநிலங் களவை என இரண்டு அவைகளிலும் நிறை வேறி இருப்பதைத் தொடர்ந்து, குடியரசுத் தலை வரின் ஒப்புதலைப் பெற்றபின் விரைவில் சட்ட மாக உள்ளது. அவ்வாறு சட்டமானால், மக்களவையில் பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை 181 ஆக உயரும் (தற்போது இது 81 ஆக மட்டுமே உள்ளது). மாநில சட்டமன்றங் களிலும் 33 சதவிகித இடங்கள் பெண்களுக்கு கிடைக்கும். இந்தக் கணக்குகள் ஒருபுறம் இருந்தாலும், இந்தச் சட்டத்தால், 10 ஆண்டு களுக்கு மகளிர்க்கு எந்தப் பயனும் இருக்கப் போவதில்லை.
உள்துறை அமைச்சர் அமித் ஷா-வே மக்களவையில் ஒப்புக்கொண்டபடி “2024 மக்களவைப் பொதுத் தோ்தலுக்குப் பிறகு மத்தியில் ஆட்சியமைக்கும் புதிய அரசு, மக்கள்தொகை கணக்கெடுப்பு, தொகுதி மறு வரையறைப் பணிகளை மேற்கொண்டு, அதன்பிறகே பெண்களுக்கான இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தும். இதில், 2027-க்கு முன்னதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடக்க வாய்ப்பில்லை. இந்தக் கணக்கெடுப்பு முடிய ஓரிராண்டுகள் ஆகும். அதன்பிறகு தொகுதி மறுவரையறை துவங்கும். இந்தப் பணிகளுக்கு குறைந்தது 4 முதல் அதிகபட்சம் 5 ஆண்டுகள் ஆகும். இத னால், மோடி அரசு கொண்டு வந்த மசோதாவால் 2031-க்கு முன்னதாக மகளிர்க்கு 33 சதவிகித இடஒதுக்கீடு கிடைக்க வாய்ப்பில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவையெல்லாம் நடந்து முடிந்து வந்தா லும், மகளிர்க்கான இந்த இடஒதுக்கீடு, அடுத்த 15 ஆண்டுகளுக்கு மட்டுமே நடைமுறையில் இருக்கும். இதனால், கொள்கையளவில் மகளிர்க் கான இடஒதுக்கீடு வரவேற்கப்பட்டாலும், ஒன்றிய பாஜக அரசின் நயவஞ்சகத்தால், பெண்கள் உடனடியாக மற்றும் நீண்டகாலத் திற்குப் பயனடைய முடியாத வகையிலேயே அது நிறைவேற்றப்பட்டு உள்ளது. முன்ன தாக மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நடைபெற்ற விவாதங்களில் பங்கேற்று தலைவர்கள் பேசியது வருமாறு: