1. ஒன்றிய அரசின் பாரத் மாலா திட்டத்தில், ஏலம் விடுதலில் முறைகேடு நடந்திருக்கிறது.
2. துவாரகா விரைவுப்பாதை கட்டுமானத்தில், ஒரு கிலோ மீட்டருக்கு திட்டச்செல வான 18 கோடி ரூபாயில் இருந்து 250 கோடி ரூபாய் செலவழித்தது ஏன்?
3. இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சுங்கச்சாவடிகளில் விதிமுறைகளை மீறி பயணிகளிடம் 132 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது.
4. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் ஏழரை லட்சம் பயனாளிகளின் விவரங்கள், ஒரே தொலைபேசி எண்ணில் இணைக்கப்பட்டுள்ளது.
5. அயோத்யா மேம்பாட்டுத் திட்டத்தில் ஒப்பந்ததாரர்களுக்குத் தேவையற்ற சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது.
6. கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் ஓய்வூதியத் திட்டத்துக்கான பணம், ஒன்றிய அரசின் விளம்பரங்களுக்காக மடை மாற்றப்பட்டுள்ளது.
7. எச்ஏஎல் விமான எஞ்சின் வடிவமைப்பில் தவறு செய்த வகையில் 154 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
அம்பலப்படுத்தியது சிஏஜி அறிக்கை
புதுதில்லி, ஆக. 18 - மோடி அரசின் மெகா ஊழல் களை அம்பலப்படுத்தியுள்ள மத்திய தணிக்கைக் குழுவின் அறிக்கை நாடு முழுவதும் மீண்டும் சர்ச்சைப் புயலை உருவாக்கியுள்ளது. ஏழு திட்டங்களில் முறைகேடுகள் நடந் திருப்பதாக மத்திய கணக்குத் தணிக் கைக் குழு விரிவாக சுட்டிக்காட்டி யிருக்கிறது.
இரண்டு மடங்காக நிதி ஒதுக்கப்பட்டது எப்படி?
நாடு முழுவதும் உள்ள சாலை கள் நெடுஞ்சாலைகள் விரைவுச் சாலைகளை இணைக்கும் பாரத் மாலா திட்டத்தின் முதல் கட்டத்தில் 34,800 கிலோ மீட்டர் சாலை அமைக்க, மத்திய அமைச்சரவை 5,35,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய் தது. 26,316 கிலோ மீட்டர் சாலை அமைக்க 8,46,588 கோடி ரூபாய் மதிப்பில் ஒப்பந்தங்கள் வழங்கப் பட்டுள்ளன. அமைச்சரவையின் ஒப்புதல்படி பார்த்தால் ஒரு கிலோ மீட்டர் சாலை அமைக்க15.37 கோடி ரூபாய் செலவாகும் நிலையில், வழங்கப் பட்டுள்ள ஒப்பந்தத்தின்படி, செலவு 32.17 கோடியாக அதிகரித்துள்ளது. அதாவது, முறைகேடாக இத்திட்டத் தின் நிதி இரண்டு மடங்காக உயர்த்தப் பட்டுள்ளது.
“ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.250 கோடியா?”
நாட்டின் முதல் எட்டு வழி விரைவு சாலையை சுமார் 9000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்ட திட்டமிடப்பட்டது. ஹரியானாவில் 18.9 கிலோ மீட்டர் தூரத்திற்கும் தில்லியில் 10.1 கிலோ மீட்டர் தூரத்துக்குமான இத்திட்டத் தில் ஒரு கிலோ மீட்டர் சாலையை அமைக்க 18 கோடி ஆகும் என்று முடிவு செய்திருந்த நிலையில், தற்போது அது ஒரு கிலோ மீட்ட ருக்கு 250 கோடி ரூபாய் என அதி கரிக்கப்பட்டுள்ளது. அதாவது, 14 மடங்கு மதிப்பீடு உயர்த்தப்பட்டுள்ளது.
சுங்கச்சாவடிகளில் கூடுதல் கட்டணம்
ஐந்து சுங்கச்சாவடிகளில் வாகன ஓட்டிகளிடம் இருந்து வசூல் செய்யப்பட்ட தொகையை ஆய்வு செய்தபோது அவை ரூ.154 கோடி அளவிற்கு அதிக தொகையை வசூல் செய்திருப்பது தெரியவந்திருப்ப தாக புகார்கள் உறுதி செய்யப் பட்டுள்ளன.
ஆயுஷ்மான் பாரத் ஊழல்!
2018ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அறிமுகப்படுத்திய ஒன்றிய அரசின் மருத்துவக் காப்பீடு திட்டம் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி நிலவரப்படி 24.3 கோடி ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீடு அட்டைகள் உருவாக்கப்பட்டு இருப்பதாக தெரி விக்கப்பட்டு உள்ளது. இதில் 7.5 லட்சம் மருத்துவக் காப்பீடு அட்டை கள் ஒரே செல்போன் எண்ணைக் கொண்டு பதிவு செய்யப்பட்டு இருப் பதாக சிஏஜி அறிக்கை தெரிவிக்கிறது. சிகிச்சையின் போது இறந்த 88,670 நபர்களுக்கு புதிதாக சிகிச்சை பார்த்ததாக காப்பீடு பெறப்பட்டி ருப்பதாகவும் இதில் பல்லாயிரம் கோடி ரூபாய் முறைகேடு நடந்தி ருப்பதாகவும் சிஏஜி அறிக்கை உறுதி செய்கிறது.
அயோத்யா மேம்பாடு திட்ட ஊழல்
அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு வரும் நிலையில், அயோத்யா மேம்பாடு திட்டத்தில், ஒப்பந்ததாரர்களுக்கு பணி கொடுக்கும்போது குறிப்பிட்ட அளவு உத்தரவாதத் தொகையை செலுத்தி இருக்க வேண்டும். 62.17 கோடி ரூபா ய்க்கு ஒப்பந்தம் எடுத்த ஒரு ஒப்பந்த தாரர் உத்தரவாத தொகையாக ரூ.3.11 கோடி செலுத்த வேண்டிய நிலையில் வெறும் ரூ.1.86 கோடி மட்டுமே செலுத்தியுள்ளார். ஆனால் அவருக்கு ஒப்பந்தங்கள் ஒதுக்கப் பட்டுள்ளன. இதன் அடிப்படையில் பார்த்தால் ஒப்பந்ததாரர்கள் 19.73 கோடி ரூபாய் அளவிற்கு அதிக லாபம் அடைந்திருப்பதாகவும் இந்த திட்டத்தை செயல்படுத்தியதால் சுமார் ரூ.8.22 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மடைமாற்றப்பட்ட ஓய்வூதிய நிதி
கிராமப்புற மேம்பாட்டு அமைச்ச கத்தின் ஓய்வூதிய திட்டத்துக்கான நிதி, விளம்பரத்துக்காக செல விடப்பட்டுள்ளது தெரியவந்துள் ளது. 2017 ஆம் ஆண்டு இத்திட்ட த்தை 19 மாநிலங்களில் விளம்பரப் படுத்த தலா 5 விளம்பரப்பலகைகள் வைக்க 2.44 கோடி ரூபாய் ஓய்வூதிய திட்டநிதியைக் கொண்டு செலவு செய்யப்பட்டுள்ளது.
ஹெச்ஏஎல் விமான எஞ்சின் வடிவமைப்பு ஊழல்
ஹெச்ஏஎல் என அழைக்கப்படும் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறு வனத்தில், தவறான திட்ட வடி வமைப்பு கோளாறுகள், உற்பத்தி யில் தாமதம் உள்ளிட்ட பல்வேறு கார ணங்களால் 2022 மார்ச் நிலவரப்படி சுமார் ரூ.159.23 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக சிஏஜி அறிக்கை யில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.