states

img

உ.பி. தேர்தலில் பாஜகவுக்கே மாயாவதி உதவி செய்கிறார்!

லக்னோ, மார்ச் 2- உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக ஆட்சியமைப்பதற்கு உதவும் நோக்கிலேயே மாயாவதி யின் பகுஜன் சமாஜ் கட்சி போட்டி அமைந்திருக்கிறது என்று சுகல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியின் தலைவர் ஓம் பிரகாஷ் ராஜ்பர் குற்றம் சாட்டி யுள்ளார். அகிலேஷ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி கூட்டணியில் இருக் கும் ஓம் பிரகாஷ் ராஜ்பர், செய்தி நிறு வனம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள் ளார். அதில் மேலும் அவர் கூறி யிருப்பதாவது: 2022 உத்தரப்பிரதேச சட்டப்பேர வைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் மற் றும் காங்கிரஸ் போன்ற கட்சிகளை வாக்காளர்கள் கவனிக்கவே இல்லை. பாஜக மூத்த தலைவரின் அறையில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டு வருகின்றனர். உ.பி. தேர்தலில் பாஜக ஆட்சி அமைக்க உதவும் நோக்கில் மாயாவதியின் கட்சி போட்டியிடுகிறது. நாக்பூரில் (ஆர்எஸ்எஸ் தலைமை யிடம்) பொய் சொல்ல பயிற்றுவிக்கப் பட்ட பாஜக தலைவர்கள் மிகப் பெரிய பொய்யர்கள். அவர்களை சமாஜ்வாதி, ராஷ்ட்ரிய லோக் தளம், எஸ்.பி.எஸ்.பி. மற்றும் பிற கூட்டணிக் கட்சிகள் ஆட்சி யில் இருந்து அகற்றும். பாஜக வெறுப்பை மட்டும் பரப்பு கிறது. மக்கள் எப்படி கல்வி பெறு வார்கள் அல்லது வேலை வாய்ப்பை பெறுவார்கள் என்பதை பற்றி பாஜக கவலைப்படுவதில்லை. பல்லியா, மௌ, காஜிபூா், அம்பேத்கர் நகர், ஆசம்கர் என எதுவாக இருந்தாலும், பாஜக இங்கு தனது கணக்கை (வெற்றி பெறாது) திறக்காது. நான்  அனைத்து மண்டலங்களிலும் சுற்றி  வருகிறேன், மாநில மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்.  இவ்வாறு ராஜ்பர் தெரிவித்துள் ளார்.