நகர்ப்புற வீடற்றவர்களின் எண்ணிக்கை தகவல் தர அஞ்சும் ஒன்றிய அரசு
நகர்ப்புற வீடற்றவர்களின் எண்ணிக்கை குறித்த கேள்வி க்கு, 2011 ஆம் ஆண்டு தரவு களை மட்டுமே தரும் ஒன்றிய அரசு, உண்மையான தரவுகளை வெளி யிட அஞ்சுகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்க ளவை உறுப்பினர் ஏ.ஏ.ரஹீம் குற்றம் சாட்டினார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில், பட்ஜெட் மீதான தீர்மா னத்தைப் பற்றி செவ்வாய்க்கிழமை மாலை மாநிலங்களவையில் பேசிய ஏ.ஏ.ரஹீம் கூறுகையில், “இன்று கேரளம் என்ன நினைக்கி றதோ, நாளை இந்தியா அதை நினைக்கும்” என்று புகழ்பெற்ற இதழாளர் ராஜ்தீப் சர்தேசாய் கூறு கிறார். ஆனால் ஒன்றிய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சரிடமிருந்து எனது கேள்விக்கு பதில் பெற்றேன். நகர்ப்புறங்களில் வீடற்றவர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதே எனது கேள்வி. அதற்கு அவர் 2011ஆம் ஆண்டின் தரவுகளை மட்டுமே தந்துள்ளார். இதுதான் இவர்கள் கூறும் “விக்சித் பாரத் (முழுமையாக வளர்ந்த இந்தியா)” என்பதன் உண்மையான சித்திரம். 2011க்குப் பிறகு தரவுகளைப் புதுப்பிக்காத ஒன்றிய அரசு, வீடற்றவர்களின் எண்ணிக்கை குறித்த உண்மையான தரவுகளை வெளியிட அஞ்சுகிறது. இந்த எண்ணிக்கை மிகவும் கவலைய ளிக்கும் நிலையில் உள்ளது.
கேரளத்தின் பாரம்பரியம்
கேரளாவில் முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில், இந்த ஆண்டு ஜனவரி வரை ஏழைகள் மற்றும் வீடற்றவர்களுக் காக 4 லட்சம் 27 ஆயிரத்து 736 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இதுதான் கேரளத்தின் பாரம் பரியம். இதை மிகுந்த பெருமிதத்து டன் கூறிக்கொள்ளலாம். இது தான் இடது முன்னணியின் மாற்று முன்மாதிரி. ஒன்றிய அரசு புறக்க ணித்தாலும், பொது நலன் மற்றும் சமூக நீதியை உயர்த்துவதில் கேரளம் முன்னணியில் உள்ளது
பொருளாதார வளர்ச்சி மற்றும் எழுத்தறிவு முன்னேற்றம்
அதே போன்று ஒன்றிய அரசு கேரளத்தைப் புறக்கணித்தாலும், நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 6.4% ஆக இருந்தாலும், கேரளம் 7.2% வளர்ச்சியை எட்டி யுள்ளது. இதை நான் பெருமிதத்து டன் கூறுகிறேன். இன்று கேரளம் எதை நினைக்கிறதோ, நாளை இந்தியா அதை நினைக்கும். எழுத்தறிவு விகிதத்தைப் பார்ப் போம். தேசிய எழுத்தறிவு விகிதம் 86.2% ஆக உள்ளது. குஜராத்தில் 78.03%, உத்தரப்பிரதேசத்தில் 67.68%, ராஜஸ்தானில் 66.1% ஆக உள்ளது. ஆனால் கேரளம் 1991 யிலேயே 100% எழுத்தறிவை அடைந்துவிட்டது.
இணைய உரிமை - அடிப்படை உரிமை
இந்த பட்ஜெட் உரையில், பள்ளி களில் பிராட்பேண்ட் இணைப்புக ளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. ஆனால் கேரளத்தில் உள்ள ஒவ்வொரு பள்ளியிலும் ஏற்கனவே இணைய இணைப்பு உள்ளது. 45,000க்கும் மேற்பட்ட வகுப்பறைகள் டிஜிட்டல் மயமாக் கப்பட்டுள்ளன. 2016 முதல் 2024 வரை பெரும்பாலான பள்ளிகள் உயர் தொழில்நுட்பத்துடன் இயங்குகின்றன. இணைய உரி மையை அடிப்படை உரிமையாக அறிவித்த ஒரே மாநிலம் கேரள மாகும்.
வறுமை ஒழிப்பில் முதன்மை
இந்த ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி, இந்தியாவின் முதல் மாநில மாக கேரளம் தீவிர வறுமையை ஒழிக்கும் என்று அறிவிக்கப் போகி றோம். இதை இந்த அவையில் பெருமையுடன் தெரிவிக்கிறேன். பொருளாதார நெருக்கடி மற்றும் இளைஞர்களின் நிலை நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 6.4% ஆக உள்ளது. இது 8.1%லிருந்து குறைந்துள்ளது. நாட்டின் மக்கள் தொகையில் 29% இளைஞர்கள் ஆவர். ஆனால் அவர்களிடம் வாங்கும் சக்தி இல்லை. முறையாக ஊதியம் பெறும் ஊழியர்களின் எண் ணிக்கை 22.8%லிருந்து 21.7% ஆக குறைந்துள்ளது. அதே நேரத்தில், கார்ப்பரேட்டுகளின் லாபம் 22.3% அதிகரித்துள்ளது.
வாழ்க்கைச் செலவு மற்றும் மன அழுத்தம்
வாழ்க்கைச் செலவு அதிகரித் தாலும், ஊதியங்கள் தேக்கநிலை யில் உள்ளன. இளம் தொழிலா ளர்கள் கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். கேரளா வில் எர்ணாகுளம் அன்னா செபாஸ்டியன் போன்றோர் வேலை தொடர்பான மன அழுத்தத்தால் மரணமடைந்துள்ளனர். இது போன்று பலர் மன அழுத்தத்தில் உள்ளனர்.
நவீன அடிமைத்தனம்
ஒன்றிய அரசு தொழிலாளர்க ளுக்கு அதிக வேலை நேரம் மற்றும் மன அழுத்தத்தைத் திணித்து, அவர்களை சுரண்டுகிறது. இது நவீன அடிமைத்தனம் ஆகும்.
ஐடி உச்சவரம்பு அதிகரிப்பு
வருமான வரி உச்சவரம்பை உயர்த்துவதால் மத்தியதர வர்க்கத் தின் வாங்கும் சக்தி அதிகரிக்காது. உண்மையான பொருளாதார முன் னேற்றம் ஊழியர்களின் ஊதியங்க ளை அதிகரிப்பதன் மூலமே சாத்தி யமாகும். இவ்வாறு ஏ.ஏ.ரஹீம் பேசினார். (ந.நி.)