சென்னை, நவ. 23 - முன்னாள் பிரதமர் வி.பி. சிங்-கிற்கு சென்னையில் அமைக் கப்பட்டுள்ள முழு உருவச் சிலையை, தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், நவம்பர் 27 அன்று திறந்து வைக்கிறார். இந்திய நாட்டின் 7-ஆவது பிரதமரான வி.பி. சிங், மண்டல் பரி ந்துரை அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 சதவிகித இடஒதுக்கீட்டை கொண்டுவந்ததன் மூலம் ‘சமூகநீதிக் காவலர்’ என்று போற்றப்படுபவர் ஆவார். இந்நிலையில், அவரின் பணி களை போற்றும் வகையில் சென்னையில் சிலை அமைக்கப்படும் என கடந்த ஏப்ர லில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத் தொடரின்போது, 20.4.2023 அன்று பேரவை விதி எண் 110-இன் கீழ் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந் தார். அதன்படி, சென்னை கடற்கரைச் சாலையில் உள்ள சென்னை மாநிலக் கல்லூரி வளா கத்தில் வி.பி.சிங்-கின் முழு உரு வக் கம்பீர சிலையை அமைக்கும் பணி முழுவீச்சில் மேற்கொள்ளப் பட்டு, தற்போது அது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், வி.பி. சிங் சிலையை, நவம்பர் 27 திங்களன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைப்பார் என்று அறி விக்கப்பட்டு உள்ளது. இந்த விழாவில் உத்தரப் பிரதேச மாநில முன்னாள் முதல்வர் அகிலேஷ், வி.பி. சிங் மனைவி சீதா குமாரி, மகன்கள் அஜய் சிங், அபய் சிங் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்வார்கள் என்றும் தெரி விக்கப்பட்டு உள்ளது.