அங்கீகரிக்கப்படாமல் இருக்கும் 345 கட்சிகளுக்கு நோட்டீஸ்
தமிழ்நாட்டில் 24 கட்சிகள்
நாடு முழுவதும் இந்திய தேர்தல் ஆணையத்தில் 2800க்கும் அதிகமான கட்சிகள் பதிவு செய்யப்பட்டு அவை அங்கீகரிக்கப்படாமல் உள்ளன. 2800க்கும் அதிகமான கட்சிகளில் பல அங்கீகரிக்கப்பதற்கான நிலையை தொடர்வதற்கு தேவையான நிபந்தனை களை இன்னும் பூர்த்தி செய்யவில்லை என தேர்தல் ஆணையத்தின் கவ னத்திற்கு வந்துள்ளது. இதையடுத்து தேர்தல் ஆணையம் நாடு முழுவதும் மேற்கொண்ட முதற்கட்ட ஆய்வில் 345 அரசியல் கட்சிகள் அடை யாளம் காணப்பட்டுள்ளன. நாட்டின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த இந்த 345 அரசியல் கட்சிகள் 2019ஆம் ஆண்டி லிருந்து கடந்த 6 ஆண்டுகளில் ஒரு தேர்தலில் கூட போட்டியிடவில்லை. மேலும் கட்சிகளுக்கு அலுவல கங்கள் கூட இல்லை. வருமான வரிச் சலுகை, அங்கீகாரம், நட்சத்திர பரப்பு ரையாளர் அனுமதி என பதிவு செய்து அங்கீகரிக்கப்படாத கட்சிகள் அரசின் சலுகைகளை அனுபவிக்கிறார்கள். கட்சியின் பெயர்களில் அடிக்கடி “லெட்டர் பேடு” பறக்கிறது மட்டும் வெளி ச்சத்திற்கு வந்துள்ளது. இந்நிலையில், இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தலைமையின் கீழ் தேர்தல் ஆணை யர்கள் சுக்பீர் சிங் சாந்து, விவேக் ஜோஷி ஆகியோர் 345 அரசியல் கட்சிகளை பட்டியலில் இருந்து நீக்குவதற்கான நடவடிக்கைகளை தொடங்கியுள்ளனர். அதன்படி, சம்பந்தப்பட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைத் தேர்தல் அதிகாரிகள் கட்சிகளிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 24 கட்சிகள்... அங்கீகரிக்கப்படாத கட்சிகளை பட்டி யலில் இருந்து நீக்கும் நடவடிக்கையாக தமிழ்நாட்டில் காமராஜர் மக்கள் கட்சி, தமிழ் மாநில கட்சி, மீனவ மக்கள் முன்னணி உள்ளிட்ட 24 கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி யுள்ளது. இந்த 24 கட்சிகளை தேர்தல் ஆணையப் பட்டியலிலிருந்து நீக்கலாமா என கேட்டு பதில் பெற்று ஒரு மாதத்திற்குள் பரிந்துரைக்க தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதி உள்ளது. பின்னர் இந்திய தேர்தல் ஆணையத்தால் இறுதி முடிவு எடுக்கப்படும் என செய்திகள் வெளியாகியுள்ளன.