வேகமாக வாகனம் ஓட்டி உயிரிழந்தவருக்கு இழப்பீடு வழங்கத் தேவையில்லை
உச்ச நீதிமன்றம் உறுதி
வேகமாகவும், கவனக்குறை வாகவும் வாகனம் ஓட்டி உயிரிழந்த நபருக்கு இன்சூரன்ஸ் நிறுவனம் இழப்பீடு வழங்கத் தேவையில்லை என கர்நாடக மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டி ருந்தது. இந்த உத்தரவை உச்சநீதி மன்றமும் உறுதி செய்துள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு ஜூன் 18 அன்று என்.எஸ்.ரவிஷா என்பவர் குடும் பத்துடன் அதிவேகமாக கார் ஓட்டிக்கொண்டு செல்லும்போது விபத்து ஏற்பட்டது. விபத்தில் ரவிஷா மட்டும் படுகாயம் அடைந்து உயிரிழந்தார். அவரது சட்டப் பூர்வ வாரிசுதாரர்கள் இழப்பீடு கேட்டு கர்நாடக மாநில உயர்நீதிமன்றத்தை நாடி னர். அப்போது ரவிஷா போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றாமல், கவனக் குறைவாகவும், மிக வேகமாகவும் காரை ஓட்டியதால் இந்த விபத்து நடந்துள்ளது. இதனால் எந்தவிதமாக இழப்பீடும் சட்டப்பூர்வ வாரிசுதாரர் பெற முடியாது என கர்நாடக மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தர வைத்தான் தற்போது உச்சநீதிமன்றமும் உறுதி செய்துள்ளது.