“நிலாவை இந்து ராஷ் டிரமாக அறிவிக்க வேண்டும்” என்று பிரதமர் மோடிக்கு அகில இந்திய இந்து மகாசபை தலைவர்- சாமியார் சக்க ரபாணி மகாராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.
சந்திரயான் 3-இல் அனுப்பப்பட்ட லேண்டர் வெற்றிகரமாக தரையிறங் கிய பகுதிக்கு ‘சிவசக்தி பாயிண்ட்’ என்றும், சந்திர யான் 2-ல் அனுப்பப்பட்ட லேண்டர் கீழே விழுந்து நொறுங்கிய பகுதிக்கு ‘திரங்கா’ என்றும் பிரதமர் நரேந்திர மோடி பெயர் சூட்டி னார்.
இதற்கு, அறிவியல் சாதனைகளிலும் பிரதமர் மோடி தனது மதவெறி அரசி யலைப் புகுத்துவதாக எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.
இந்நிலையில், இந்து மகாசபையின் தலைவர் சாமியார் சக்கரபாணி, டுவிட்டரில் காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “நிலவை இந்து ராஷ்டிரமாக நாடாளுமன் றம் அறிவிக்க வேண்டும். சந்திரயான் 3 தரையிறங்கிய ‘சிவசக்தி’ புள்ளியை தலை நகராக உருவாக்க வேண் டும். அப்போதுதான், ஜிகாதி மனநிலையுடன் உள்ள பயங்கரவாதிகள் அங்கு செல்ல முடியாது” என்று தெரிவித்துள்ளார்.