1923 இல் பிறந்த நெல்சன் பீரி, அமெரிக்காவின் மின்னெசோட்டா பகுதியில் வளர்ந் தார். ஒரு கருப்பின குடும்பத்தைச் சேர்ந்த இவர், கட்டிடத் தொழிலாளி யாக பணியாற்றி, பின்னர் அரசியல் புரட்சியாளராக உருவானார். பாசிசத்தையும் இனவெறியையும் எதிர்த்துப் போராடுவதில் உறுதியாக இருந்த நெல்சன், இரண்டாம் உலகப் போரில் பங்கெடுத்தார். பின்னர், கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். பல்கலை. படிப்பை பாதியில் நிறுத்திய இவர், புதிய அமெரிக்காவுக்கான புரட்சியாளர்கள் அமைப்பு, தி பீப்பிள்ஸ் டிரிப்யூன் உள்ளிட்ட இடதுசாரி பத்திரிகைகள் மற்றும் செய்தித்தாள்களை நிறுவுவதற்கு, கம்யூனிஸ்ட் குழுக்களுடன் சேர்ந்து பணியாற்றினார். தன் வாழ்க்கை சம்பவங்களைக் கொண்ட, பிளாக் ஃபயர், பிளாக் ரேடிக்கல் என்ற இரண்டு நினைவுக் குறிப்புகள் உட்பட சில நூல்களையும் எழுதியுள்ளார். பிளாக் ஃபயர் மற்றும் பிளாக் ரேடிக்கல் நூல்களுக்கு விருது கிடைத்தது. 1950-களின் முற்பகுதியில் கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்து தேசிய கருப்பின தொழிலாளர் காங்கிரசை தோற்றுவித்தார். மேலும் கலிபோர்னியா கம்யூனிஸ்ட் லீக் அமைப்பை தோற்றுவித்து, அதில் முக்கியப் பங்காற்றினார். அமெரிக்காவில் நிலவும் இனவெறி குறித்து 2011 செப்.13 அன்று நெல்சன் பீரிடம் நேர்காணல் நடத்தப்பட்டது. அதில், “வரலாற்றில் தனிமனிதனின் பங்கு மிக முக்கியமானது. ஒருவேளை ஆபிரகாம் லிங்கன் உயிரோடு இருந்திருந்தால், 4-5 ஆண்டுகளுக்குள் கருப்பின மக்களின் பிரச்சனைக்கு தீர்வு கண்டு, அவர்களுக்கான உரிமைகளை வழங்கி இருப்பார். நிறம் குறித்த பாகுபாடு அமெரிக்கர்களின் மனதில் ஆழமாக பதிந்துள் ளது. அவர்களால் யதார்த்தத்தைப் பார்க்க முடியவில்லை. இங்கு கருப்பின ஏழைக்கும், வெள்ளையின ஏழைக்கும் மத்தியில் பொதுவாக இருப்பது ஏழ்மை மட்டுமே. நிறம் (கருப்பு) அல்ல” என்றார் பீரி. இந்நேர்காணல் சிகாகோ நகர வானொலியில் நேரலையில் ஒலிபரப்பப்பட்டது. 76 ஆண்டுகள் தீவிரமாகச் செயல்பட்ட நெல்சன் பீரி, 2015 செப்டம்பர் 6 அன்று தனது 92ஆம் வயதில் காலமானார்.
இன்று தோழர் நெல்சன் பீரி நினைவு தினம்