states

img

நீட் முதுநிலைத் தேர்வை ஒரே கட்டமாக நடத்த வேண்டும்

நீட் முதுநிலைத் தேர்வை ஒரே கட்டமாக நடத்த வேண்டும்

உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

நீட் முதுநிலைத் தேர்வு வருகிற ஜூன் 15ஆம் தேதி ஒரே நாளில் இரண்டு கட்டமாக (ஷிப்டுகளாக) நடத்தப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்து இருந்தது.  இந்நிலையில், நீட் முதுநிலைத் தேர்வை ஒரே கட்டமாக நடத்த உத்தரவிட வேண்டும் என்று கூறி மாணவர்கள் தொடர்ந்த வழக்கு வெள்ளிக்கிழமை அன்று உச்சநீதிமன்ற நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான சஞ்சய் குமார், என்.வி.அஞ்சாரியா அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. தேசிய தேர்வு முகமை மற்றும் மாணவர்கள் தரப்பு வாதத்திற்கு பின்பு  உச்சநீதிமன்ற நீதிபதிகள், “நீட் தேர்வை  இரண்டு கட்டமாக நடத்துவது அதி காரத்துடன் கூடிய தன்னிச்சையான அணுகுமுறை ஆகும். இரண்டு வினாத்தாள்களும் ஒரே மாதிரியாக இருக்கும் என்று கூற முடியாது. அதா வது இரண்டுமே சிரமமாகவோ அல்லது இரண்டுமே எளிதாகவோ இருக்க முடி யாது. அதனால் தேர்வை இரண்டு கட்ட மாக நடத்துவது சரியல்ல. நீட் முது நிலைத் தேர்வை ஒரே கட்டமாக நடத்தி முடிக்க தேர்வை நடத்தும் தேசிய தேர்வு  முகமை நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக தேர்வை வெளிப்படையான, நேர்மையான முறையில் நடத்த வேண்டும். தேர்வுக்கு இன்னும் 2 வாரங்கள் இருப்பதால் தேவையான தேர்வு மையங்களில் ஏற்பாடுகளை விரைவாக செய்து முடிக்க வேண்டும்” என உத்தரவிட்டுள்ளனர்.