ஒன்றிய அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த படங்கள், நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலை ஞர்களுக்கு தேசிய திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டு வரு கிறது. அதன்படி நடப்பாண்டிற் கான 69-ஆவது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா தில்லியில் செவ்வாயன்று நடைபெற்றது. விருதுக்கான கேடயங்களை குடியரசு தலை வர் திரவுபதி முர்மு வழங்கினார். சிறந்த தமிழ் திரைப்பட தேசிய விருதை வென்ற “கடைசி விவசாயி” படத்தின் இயக்குநர் மணிகண்டன், இ.வி.கணேஷ் பாபு கதை, திரைக்கதை, வச னம் எழுதி இயக்கி தயாரித்தி ருக்கும் கருவறை குறும்படத்திற் காக அதன் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, “சிற்பிகளின் சிற்பங்கள்” படத்திற்காக சிறந்த கல்வி திரைப்பட தேசிய விருதை பி.லெனின், ஒட்டுமொத்த பிரி வில் சிறந்த நடிகர் விருதை தெலுங்கு நடிகர் அல்லு அர் ஜுன், நடிகைகள் ஆலியா பட், க்ரித்தி சனோன் என பலர் தேசிய விருதினை பெற்றனர்.