கர்நாடக மாநிலம் சிக்கபல்லபூர் மக்களவைத் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளராக எம்.பி.முனிவெங்கடப்பா வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறார். ஏப்ரல் 26 அன்று வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மனுதாக்கலுக்குப் பிறகு நடைபெற்ற ஆதரவுப் பேரணியில் ஏராளமான ஆதரவாளர்கள் மற்றும் பொது மக்கள் பங்கேற்றனர். அதில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பி.வி.ராகவலு உரையாற்றினார். பாஜகவுக்கு மாற்றினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியால் மட்டுமே தர முடியும், கட்சியின் வேட்பாளருக்கு வாக்களிப்பதன் மூலம் அதை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.