states

img

பஜ்ரங்தள் ஆர்ப்பாட்டத்தில் ‘கோட்சே வாழ்க!’ என கோஷம்!

புதுதில்லி, ஜன.4- சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூ ரில் `தரம் சன்சத்’ என்ற பெயரில் இந்துத்துவா அமைப்பினர் மாநாடு நடத்தினர். இதில், மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த காளிசரண் மகராஜ் என்ற சாமியார் பேசுகை யில், “மகாத்மா காந்தியை கொலை செய்ததற்காக நாதுராம் கோட்சே- வுக்கு வீரவணக்கத்தை செலுத்திக் கொள்கிறேன்’’ என்று சர்ச்சையை ஏற்படுத்தினார்.  இதற்கு நாடு முழுவதும் கண்ட னங்கள் எழுந்த நிலையில், சாமி யார் காளிசரண் மீது, சத்தீஸ்கர் காவல்துறையினர் ஐபிசி 505(2) 294 ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து அவரைக் கைது செய்தனர். அப்போதும் கூட, “என் மீது வழக் குப் பதிவு செய்யப்பட்டு இருப்ப தற்காக நான் வருத்தப்படவில்லை. நான் மகாத்மா காந்தியை தேசத் தந்தையாக கருதவில்லை’ என்று மீண்டும் காந்தியை இழிவு படுத்தி னார்.

இந்நிலையில், சாமியார் காளி சரணை விடுதலை செய்யக் கோரி, பஜ்ரங் தள் மதவெறிக் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் ம.பி. மாநிலம் இந்தூ ரில் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.  அப்போது, காவல் துறையினர் முன்பாகவே ‘நாதுராம் கோட்சே ஜிந்தாபாத்’ என அவர்கள் முழக் கங்களை எழுப்பியுள்ளனர். சத்தீஸ்கரின் காங்கிரஸ் முதல்வர் பூபேஷ் பாகேலுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பிய அவர்கள், முதல்வர் பாகேலுக்கு தங்கள் கட வுளான ஹனுமன் நல்லறிவை வழங்க வேண்டும் என்று கூறி, அதற் கான மந்திரங்களையும் ஓதியுள்ள னர்.  எனினும், தேசவிரோத கருத் துக்களை முழங்கிய பஜ்ரங் தள் அமைப்பினர் மீது, ம.பி. மாநில பாஜக அரசின் காவல்துறை வழக்கு எதையும் பதிவு செய்ய வில்லை.  சாமியார் காளிசரண் மகராஜ், மத்தியப்பிரதேசத்தில் சில ஆண்டு களுக்கு முன் மர்மமான முறையில் இறந்த சாமியார் பையாஜி மகரா ஜின் முக்கியச் சீடர் என்பது குறிப்பி டத்தக்கது.