கேரளத்தில் உலக வங்கியின் உதவியுடன் கேரா திட்ட செயலாக்கம்
ரப்பர், நறுமணப் பொருட்கள் வாரியங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
திருவனந்தபுரம் உலக வங்கியின் உதவியுடன் செயல்படுத்தப்படும் “கேரா (கேரள காலநிலை தாங்கும் வேளாண் மதிப்பு சங்கிலி நவீனமய மாக்கல்)” திட்டத்திற்காக, விவசாய மேம்பாடு மற்றும் விவசாயிகள் நலத் துறையுடன் ரப்பர் வாரியம் மற்றும் நறுமணப் பொருட்கள் (ஸ்பைசஸ்) வாரியம் ஒரு புரிந்துணர்வு ஒப்பந் தத்தில் கையெழுத்திட்டுள்ளன. ரப்பர் வாரிய நிர்வாக இயக்குநர் வசந்தகேஷன் மற்றும் கேரா திட்டத்தின் கூடுதல் திட்ட இயக்கு நர் மற்றும் தொழில்கள், வணிக இயக்குநர் பி.விஷ்ணு ராஜு ஆகி யோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத் திட்டனர். நறுமணப் பொருட்கள் வாரி யம் சார்பாக இயக்குநர் டாக்டர் ஏ.பி. ராமஸ்ரீ கையெழுத்திட்டார். இந்த திட்டத்தின் கீழ், சுழற்சி முறையில் ரப் பர் மற்றும் ஏலக்காய் பயிரிடுபவர் களுக்கு நிதி உதவி கிடைக்கும். ரப்பர் சாகுபடிக்கு ஹெக்டேருக்கு ரூ. 75,000 மற்றும் ஏலக்காய்க்கு ரூ. 1,00,000 இரண்டு ஹெக்டேருக்கு என வழங்கப்படும். கோட்டயம், எர்ணாகுளம், பத்த னம்திட்டா, கண்ணூர், மலப்புரம் மற் றும் திருவனந்தபுரம் மாவட்டங்களில் உள்ள ரப்பர் விவசாயிகளும், இடுக்கி யில் உள்ள ஏலக்காய் விவசாயிகளும் இந்த திட்டத்தின் மூலம் பயனடை வார்கள். கோட்டயத்தில் உள்ள இந் திய ரப்பர் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்ற விழாவிற்கு பி.விஷ்ணு ராஜ் தலைமை தாங்கினார். கேரா திட்டத்தை செயல்படுத்துவதற்கான அதிகாரிகளுக்கான பயிற்சித் திட்டத்தை எம்.வசந்தகேசன் தொடங்கி வைத்தார். ரப்பர் உற்பத்தி ஆணை யர் டாக்டர் டி.சிஜு, மசாலா வாரிய இயக்குநர் டாக்டர் ஏ.பி.ராமஸ்ரீ மற்றும் இயக்குநர் (மேம்பாடு) பொறுப்பு தர்மேந்திர தாஸ் ஆகியோர் பேசினர்.
தலித் குடும்பங்களின் ரூ.68 கோடி கடன் தள்ளுபடி
பஞ்சாப் அமைச்சரவை ஒப்புதல்
பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. முத லமைச்சராக பகவந்த் மான் உள்ளார். இந்நிலையில், பஞ்சாப் பட்டியல் சாதியினர் நில மேம்பாடு மற்றும் நிதிக் கழகத்திலிருந்து 4,000க்கும் மேற்பட்ட தலித் குடும்பங்கள் பெற்ற ரூ.68 கோடி கடனை தள்ளுபடி செய்ய பஞ்சாப் அமைச்சரவை செவ்வாய்க்கிழமை அன்று ஒப்புதல் அளித்துள்ளது. இந்த அறிவிப்பை முதலமைச்சர் பகவந்த் மான் வெளியிட்டுள்ளார். சண்டிகரில் முதலமைச்சர் பகவந்த் மான் தலைமையில் நடைபெற்ற அமைச் சரவைக் கூட்டத்தில்,” மார்ச் 31, 2020 வரை திரட்டப்பட்ட கடன்கள் தள்ளு படி செய்யப்படும். கடைகள் திறப்பது, பால் பண்ணை உள்ளிட்ட பல்வேறு நோக்கங்களுக்காக தலித் குடும்பங்கள் மாநில நில மேம்பாடு மற்றும் நிதிக் கழ கம் மூலம் வாங்கிய கடனை மாநில அரசு தள்ளுபடி செய்யும்” என ஒப்பு தல் அளிக்கப்பட்டுள்ளது. புவனேஸ்வரம்
ஒடிசா: கழிவுநீர் தொட்டி விஷவாயு தாக்கி 4 தொழிலாளர்கள் பலி
பாஜக ஆளும் ஒடிசா மாநிலத் தில், நபரங்பூர் மாவட்டத் தின் படல்குடா கிராமத்தில் ஒரு வீட்டில் கழிவு நீர் அகற்றும் பணிக் காக 4 தொழிலாளர்கள் சென்றுள்ளனர். 4 பேரும் துப்புரவுத் தொழிலாளர்கள் ஆவர். இந்நிலையில், முதலில் 2 தொழிலா ளர்கள் கழிவு நீர் தொட்டிக்குள் இறங்கி சுத்தம் செய்யும் பணியை மேற்கொண்ட னர். ஆனால் நீண்ட நேரமாகியும் 2 தொழி லாளர்களும் தொட்டியை விட்டு மேல் பகுதிக்கு வரவில்லை. இதனால் உடன் வந்த 2 தொழிலாளர்கள் கழிவு நீர் தொட்டிக்குள் இறங்கியுள்ளனர். அவர் களும் மேலே வராததால் வீட்டின் உரிமை யாளர் தீயணைப்புத் துறை மற்றும் காவல்துறையினருக்கு தகவல் தெரி விக்க, பாதுகாப்பு கவசங்களுடன் தீய ணைப்புத் துறை வீரர்கள் கழிவு நீர் தொட்டிக்குள் இறங்கினர். அப்போது 4 தொழிலாளர்களும் மயக்கநிலையில் இருந்தனர். அவர் களை மீட்டு அருகில் உள்ள மருத்துவ மனையில் பரிசோதித்த போது 4 பேரும் விஷவாயு தாக்கி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த சம்பவம் தொடர் பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். லண்டன்
பாலஸ்தீன ஆதரவு போராட்டம்
கேம்பிரிட்ஜில் இந்திய வம்சாவளி பெண்ணுக்கு மிரட்டல்
பட்டமளிப்பு விழாவில் பாலஸ்தீனத் திற்காக குரல் எழுப்பிய இந்திய வம்சாவளி மாணவியை அமெ ரிக்காவில் உள்ள மாசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் (எம்ஐடி) தடை செய்துள்ளது. ஜார்ஜியாவைச் சேர்ந்த மேகா வெமுரி மே 29 அன்று மாசாசூசெட்ஸின் கேம்பிரிட்ஜில் நடந்த எம்ஐடி பட்ட மளிப்பு விழாவில் பாலஸ்தீன கெபியா அணிந்திருந்தார். மேலும் காசாவில் இஸ்ரேலின் இனப்படுகொலையை கடு மையாக விமர்சித்தார். இதையடுத்து உடனடியாக மேகா மற்றும் அவரது குடும்பத்தினர் நிகழ்வுகளில் தொடர்ந்து பங்கேற்க தடை விதித்து அதிகாரிகள் ஒரு மின்னஞ்சல் அனுப்பினர்.