தில்லியில் வீடு முழுக்க விஷவாயு செலுத்தி தாய் மற்றும் 2 மகள்கள் தற்கொலை கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தலைநகர் தில்லியில் வசந்த் விஹார் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் மஞ்சு(50) என்ற பெண் தனது இரு மகள்களுடன் வசித்து வந்தார். மஞ்சுவின் கணவன் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கொரோனா தாக்கத்தால் உயிரிழந்துள்ளார். அதனால் மஞ்சு மற்றும் அவரது இரு மகள்களும் மன அழுத்ததில் இருந்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று மாலையிலிருந்து இவர்கள் வீட்டின் கதவு திறக்கப்படாமலே இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அருகே வசிப்பவர்கள் இது குறித்து போலீசாருக்கு தெரிவித்துள்ளனர். பின்னர் அங்கு வந்த போலீசார் மஞ்சுவின் வீட்டுக் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தனர்.
அப்போது மஞ்சு, அன்ஷிகா, அன்கு ஆகிய மூன்று பேரும் உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளனர். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார் இருந்தை கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார் மூன்று பேரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் வீட்டில் இருந்த கியாஸ் சிலிண்டர் திறக்கப்பட்டு அதிலிருந்து கியாஸ் வாயு வீடு முழுவதும் வீசியுள்ளது. வீட்டின் கதவு ஜன்னல்கள் முழுவதும் பிளாஸ்டிக் கவர்களால் மூடப்பட்டிருந்தது.
இதையடுத்து வீட்டில் தற்கொலை கடிதம் ஒன்றும் போலீசாருக்கு கிடைத்துள்ளது. அந்த கடிதத்தில் வீட்டிற்குள் நுழையும் யாரும் தீக்குச்சியை பற்றவைக்க வேண்டாம். அவ்வாறு செய்தால் வீடு முழுவதும் தீயில் கருகி விடும் என எழுதிவைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் பல கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.