மாலே,அக்.2- மாலத்தீவு ஜனாதிபதி தேர்த லில் தற்போதைய ஜனாதிபதி இப்ராஹிம் சோலியை தோற் கடித்து மாலே நகராட்சி தலைவ ராக பதவி வகித்த மாலத்தீவின் முற்போக்குக் கட்சியின் வேட்பா ளர் முகமது முய்சு வெற்றி பெற்றுள் ளார். செப்டம்பர் 9 அன்று முதல் சுற்று வாக்குப்பதிவும் செப்டம் பர் 30 அன்று இரண்டாம் சுற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இரண்டாம் சுற்று முடிவில், முன்னாள் ஜனாதிபதி சோலி 46 சதவீத வாக்குகள் பெற்றிருந்தார் எனவும் எதிர்க்கட்சி வேட்பாளர் முய்சு 54 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார் என்றும் தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் தெரி வித்தது. தேர்தலில் 2,82,000 வாக்கா ளர்களில் சுமார் 85 சதவீதமான வர்கள் 187 தீவுகளில் அமைக்கப் பட்டிருந்த 586 க்கும் மேற்பட்ட வாக்குச் சாவடிகளில் வாக்க ளித்துள்ளனர். நவம்பர் 17 அன்று புதிய ஜனாதிபதி முய்சு பதவியேற்கும் வரை இப்ராஹிம் சோலி ஜனாதி பதியாக தொடர்வார்.தலைநகர் மாலேயில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய முய்சு, “மாலத் தீவு சுதந்திரத்தை மீண்டும் பெறு வதற்கு இன்று மக்கள் வலுவான முடிவை எடுத்துள்ளனர்.நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஒற்று மையுடன் செயல்படுவோம்” என்று கூறினார். மேலும் முய்சுவுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட முன்னாள் ஜனாதிபதி அப்துல்லா யாமீனுக்கு, ஊழல் மற்றும் பணமோசடி குற்றவழக்கில் 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலை யில் யாமீனை வீட்டுக் காவலில் வைக்குமாறு ஜனாதிபதி சோலி க்கு, முய்சு கோரிக்கையும் விடுத் தார். “இந்தியா-மாலத்தீவு இரு தரப்பு உறவை வலுப்படுத்தவும், இந்தியப் பெருங்கடல் பிராந்தி யத்தில் நமது ஒட்டுமொத்த ஒத்துழைப்பை மேம்படுத்தவும் இந்தியா உறுதியுடன் உள்ளது” என முய்சு வெற்றி அறிவிக்கப் பட்டதைத் தொடர்ந்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு டுவிட்டர் X தளத்தில் வாழ்த்து கூறியுள்ளார்.