இந்தியப் பெரு முதலாளிகள், கார்ப்பரேட்களின் நண்பரான மோடி சில கார்ப்பரேட் நிறுவனங்கள் டீசல் விலையை உயர்த்திக் கொள்ள சிக்னல் கொடுத்துவிட்டார். அதாவது சில்லரை விலையை உயர்த்தக்கூடாது. மொத்தமாக டீசலை வாங்குபவர்களின் தலையில் கைவையுங்கள் எனக் கூறி யுள்ளார். ஆனால் அது அத்துடன் நிற்குமா? இதனால் இன்னும் சில நாட்களில் சத்தமில்லாமல் சில பொருட்களின் விலைகள் தாறுமாறாக உயரும் அபா யம் ஏற்பட்டுள்ளது. அதாவது நயாரா எனர்ஜி, ஜியோ-பிபி மற்றும் ஷெல் போன்ற தனியார் பெட்ரோல்-டீசல் விற்பனையாளர்கள் சில்லரையில் பெட்ரோல்-டீசல் விற்ப தால் பாதிக்கப்பட்டுள்ளனராம். அத னால் இந்த கண்ணசைவு.
மொத்தமாகப் பயன்படுத்து பவர்களுக்கு விற்கப்படும் டீசல் விலை, சர்வதேச எண்ணெய் விலையில் கிட்டத் தட்ட 40 சதவீதம் உயர்ந்துள்ளது. அத னால் லிட்டருக்கு சுமார் ரூ. 25 உயர்த் தப்பட்டுள்ளது, ஆனால் பெட்ரோல் சில்லரை விலையில் மாற்றமும் இல்லை என்று இப்போது கூறப்படுகிறது. பல தொழில் நிறுவனங்கள் மால்கள் (வணிக வளாகங்கள்) சில்லரை விற் பனை நிலையங்களில் டீசல் வாங்க வரிசை கட்டி நிற்பதால் சில்லரை விற் பனை அதிகரித்துள்ளது இதனால் நயாரா எனர்ஜி, ஜியோ- பிபி மற்றும் ஷெல் போன்ற தனியார் சில்லரை விற்பனையாளர்கள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார் களாம். காரணம் கிட்டத்தட்ட 136 நாட்க ளாக சில் லரை விற்பனை விலை மாற்ற மின்றி தொடர்கிறது அல்லவா? சில்லரை விலையில் மாற்றமில்லா மல் தொடர்ந்தால் நயாரா எனர்ஜி, ஜியோ-பிபி மற்றும் ஷெல் நிறு வனங்கள் விற்பனை நிலையங்களை மூடிவிடுவோம் என மிரட்டுகின்றன. 2008- ஆம் ஆண்டில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், நாட்டில் உள்ள அதன் 1,432 பெட்ரோல் பங்குகள் அனைத்தை யும் மூடிவிட்டது.
மொத்தமாக டீசல் தேவைப்படு வோர் சில்லரை நிலையங்களுக்கு வரு வதால் எங்களால் தாக்குப்பிடிக்க முடி யாது. பங்குகளை மூடிவிடுவோம் என் கின்றனர். மோடியின் “சிக்னலை” அடுத்து மும்பையில் மொத்தமாக பயன்படுத்து வோருக்கு விற்கப்படும் டீசல் விலை லிட்டர் ரூ.122.05 ஆக உயர்த்தப்பட்டுள் ளது. இதை சில்லரையில் வாங்கினால் ஒரு லிட்டர் ரூ. 94.14 தான். தில்லியில், ஒரு லிட்டர் டீசல் ரூ.86.67 ஆக உள்ளது. மொத்தமாக வாங்கு பவர்களுக்கு லிட்டர் ரூ.115 என நிர்ண யிக்கப்பட்டுள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் 2021 நவம்பர் 4-ஆம் தேதி முதல் பெட்ரோல் மற்றும் டீசல் சில்லறை விலையை உயர்த்தவில்லை, ஐந்து மாநில சட்ட மன்றத் தேர்தலை கருத்தில்கொண்டே பாஜக அமைதியாக இருந்தது. மார்ச் 10- ஆம் தேதி ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலை யில் பெட்ரோல், டீசல் விலை உயரும் என எதிர்பார்க்கப்பட்டது. இப்போது உள்ள நிலையில் விரைவில் பெட் ரோல், டீசல் விலை லிட்டருக்கு குறைந் தது ரூ.5 உயரும் என எதிர்பார்க்கப் படுகிறது
நயாரா எனர்ஜி, ஜியோ-பிபி மற்றும் ஷெல் போன்ற தனியார் எரிபொருள் சில்லரை விற்பனையாளர்கள் பெட் ரோல் மற்றும் டீசல் விலைகளை உயர்த்த முடியாத நிலை இருந்தது. ஏனெனில் அவர்கள் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசி), பாரத் பெட்ரோ லியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (பிபி சிஎல்) விலையை விட அதிக விலைக்கு விற்றால் வாடிக்கையாளர்களை இழந்து விடுவோம் என்ற அச்சம் தான். பொதுத்துறை நிறுவனங்களும் கூட அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், மால்கள் மற்றும் விமானம் போன்ற மொத்தப் பயனர்களுக்கான கட்ட ணங்களை உயர்த்திவிட்டதாகக் கூறப் படுகிறது. பெட்ரோலை மொத்தமாக வாங்கி தொழில்துறையில் பயன்படுத்து பவர்கள் இல்லை. ஆனால் டீசல் தொழிற் சாலைகளில் பரவலாகப் பயன்படுத் தப்படுகிறது.
மொத்தமாகப் பயன்படுத்துபவர் எண்ணிக்கைக்கும் பெட்ரோல் பம்ப் விலைக்கும் இடையே லிட்டருக்கு சுமார் ரூ. 25 என்ற மிகப் பெரிய வேறுபாடு இருப்பதால், மொத்தமாகப் பயன் படுத்துபவர்கள் எண்ணெய் நிறுவனங்க ளிடமிருந்து நேரடியாக டேங்கர்களை முன்பதிவு செய்வதை விட சில்லைறை டீசல் விற்பனையாளர்கள் மூலம் தேவையைப் பூர்த்தி செய்கின்றன. இதுகுறித்து மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்ட கேள்விக்கு நயாரா எனர்ஜி பதிலளிக்கவில்லை மறுத்துவிட்டது. பெரும் கொள்முதல் நிறுவனங்கள் சில்லரை நிலையங்களுக்கு செல்வ தால் விற்பனையில் சாதனை ஏற்பட்டுள் ளது. ஆனால், இது எங்களது விநியோ கக் உள்கட்டமைப்புகளில் பெரும் சுமை யை ஏற்படுத்துகிறது என்று ஜியோ-பிபி செய்தித் தொடர்பாளர் கூறினார்.
தனியார் சில்லரை விற்பனையாளர் கள் தங்களது விற்பனை விவரத்தை வெளியிட மறுத்துவிட்டனர். பொதுத் துறை நிறுவன சில்லரை விற்பனையா ளர்கள் மார்ச் 1-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை 3.53 மில்லியன் டன் டீசலை விற்றுள்ளனர். இது ஒரு மாதத்திற்கு முந்தையதை விட 32.8 சதவீதம் அதிக மாகும். பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கடந்த வாரம் கூறுகை யில், “விலை அதிகரிப்பை எதிர்பார்த்து பதுக்கல் காரணமாக எரிபொருள் விற்பனை 20 சதவீதம் உயர்ந்துள்ளது, ஆனால் மொத்தமாக கொள்முதல் செய்பவர்களும் பெட்ரோல் பம்பு களில் வரிசையில் நிற்பதால் விற்பனை அதிகரித்ததாக கூறினார்.
நயாராவிற்கு 6,510 பெட்ரோல் பங்கு கள் உள்ளன, ஜியோ-பிபி 1,454 உள் ளன. நாட்டில் உள்ள 81,699 பெட்ரோல் பங்குகளில் 90 சதவீதம் பொதுத்துறை நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் உள்ளன. ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிந்துவிட்ட நிலையில் பெட்ரோல்-டீசல் விலை உயர்வு எந்த நிமிடமும் வெளியாகலாம் என்கிறனர் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள்.