நியூஸ் கிளிக் என்ற செய்தி இணையதளத்தின் மீதான அடக்குமுறையை ‘இந்தியா’ கூட்டணி கட்சிகள் கடுமையாக கண்டித்துள்ளன. இது “பத்திரிகைகள் மீதான பாஜக அரசின் புதிய தாக்குதல்” என்று கூறியுள்ளன. “நாங்கள் ஊடகங்களுடன் உறுதியாக நிற்கிறோம் மற்றும் அரசியலமைப்பு ரீதியாக பாது காக்கப்பட்ட பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்திற்காக நாங்கள் உறுதியாக இருக்கிறோம்” என்று இந்தியா கூட்டணி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. “ஒன்றிய பாஜக அரசாங்கமானது, கடந்த ஒன்பது ஆண்டுகளில், பிரிட்டிஷ் ஒலிபரப்புக் கழகம், நியூஸ் லாண்ட்ரி, டைனிக் பாஸ்கர், பாரத் சமாச்சார், காஷ்மீர் வாலா, தி வயர் போன்றவற்றை துன்புறுத்தி ஒடுக்க, புலனாய்வு அமைப்புகளை ஏவி வருகிறது. ஊடக நிறுவனங்களை குட்டி முதலாளி கள் கையகப்படுத்துவதற்கு வசதியாக ஊடகங்களை தனது கட்சி மற்றும் சித்தாந்த நலன்களுக்கான ஊது குழலாக மாற்ற பாஜக அரசு முயற்சிக்கிறது.
அரசாங்க மும் அதன் கருத்தியல் ரீதியாக இணைந்த அமைப்புகளும் அதிகாரத்திற்கு எதிராக உண்மை யைப் பேசிய தனிப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு எதிராக பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. மேலும், தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021 போன்ற பிற்போக்குத்தனமான கொள்கைகளையும் பாஜக அரசாங்கம் முன்னெடுத்துச் சென்றுள்ளது. முதிர்ச்சியடைந்த ஜனநாயக நாடாக இந்தியாவின் உலகளாவிய நிலைப்பாட்டை இது சமரசம் செய்கிறது. பாஜக அரசாங்கத்தின் நிர்ப்பந்த நடவடிக்கை கள் எப்போதும் அதிகாரத்திற்கு எதிராக உண்மையைப் பேசும் ஊடக நிறுவனங்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு எதிராக மட்டுமே இயக்கப்படுகின்றன. மாறாக, தேசத்தில் வெறுப்பையும் பிரிவினையையும் தூண்டும் ஊடகவியலாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் பாஜக அரசு முடங்கிக் கிடக்கிறது. எனவே, ஒன்றிய அரசானது, தேசம் மற்றும் மக்கள் மீது அக்கறையுள்ள உண்மையான பிரச்சனை களில் கவனம் செலுத்துவதுடன், தனது தோல்விகளில் இருந்து மக்களின் கவனத்தை திசைத்திருப்ப ஊட கங்களைத் தாக்குவதை நிறுத்திக் கொள்ள வேண் டும்” என்று இந்தியா கூட்டணி குறிப்பிட்டுள்ளது.