அரசமைப்புச் சட்ட ரீதியான நிறுவனங்களான தேசிய மனித உரிமை ஆணையம், தலைமை தகவல் ஆணையம், இந்திய பிரஸ் கவுன்சில் ஆகிய அமைப்புகள் ராணுவம் தொடர்பான பிரச்சனைகளில் உரிய தலையீடு செய்ய முடியாத அளவில் கட்டுப்படுத்தப்படுகின்றன. தேசிய மனித உரிமை ஆணையம் ,காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்களில் ராணுவம் புரிந்த குற்றங்கள் ,தகாத செயல்பாடுகள் குறித்து ஒருபோதும் ஆய்வு செய்ய முடிந்ததே இல்லை. ஆனால், முன்னாள் நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையில் உள்ள மனித உரிமை ஆணை யம் ராணுவத்தின் மனித உரிமை மீறல் குற்றங்களை நியா யப்படுத்தும் நிலைப்பாட்டை மேற்கொண்டது. மணிப்பூரில் போலி என்கவுண்டரில் கொல்லப்பட்டவர்கள் குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலவையில் உள்ளது. இந்த வழக்கை விசாரிக்கும் அமர்வை மாற்றியமைக்குமாறு 2018 இல் 700 ராணுவ அதிகாரிகள் உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்தனர். தங்களின் தவறுகளுக்கு தாங்கள் தண்டிக்கப்படக்கூடாது எனும் மனநிலை மோடி ஆட்சியில் ராணுவத்திற்கு வலுவாக ஊட்டப்பட்டது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. ஏப்ரல் 2021 இல் மணிப்பூரில் போலி என்கவுண்டரில் மக்கள் கொல்லப்பட்டது குறித்து 39 வழக்குகளில் 17 வழக்குகளில் மட்டுமே குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கு களிலும், ஆயுதம் தாங்கிய படைகளின் சிறப்பு அதிகாரங்களை காரணம் காட்டி அவர்களை தண்டிக்க அனுமதி வழங்க மோடி அரசின் பாதுகாப்புத் துறை அமைச்சகம் மறுத்தது.