புதுதில்லி, டிச. 14 - அருணாச்சலப் பிரதேச எல்லையில், சீனா ராணுவம் அத்துமீறி ஊடுருவ முயன்ற தாக கூறப்படும் விவகாரம் குறித்து, நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சி கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆனால், இந்த விவ காரம் பற்றி விவாதிப்பதற்கு அஞ்சும் நரேந்திர மோடி அரசு, எதிர்க்கட்சிகளின் கோ ரிக்கைக்கு செவிசாய்க்கா மல் இருந்து வருகிறது. இதனால், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி தலைமையில், புதன் கிழமையன்று இரண்டாவது நாளாக எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர். இந்த வெளிநடப்பில் காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, திமுக, மதிமுக, ராஷ்ட்ரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், திரிணாமூல் காங்கிரஸ், தெலுங்கு தேசம், ஆம் ஆத்மி உள்ளிட்ட 17 கட்சிகள் கலந்து கொண்டன. அருணாச்சலப் பிரதேச எல்லைப் பகுதியிலுள்ள தவாங் செக்டார் யாங்ட்ஸி பகுதியில் டிசம்பர் 9-ஆம் தேதி இரவு, இந்திய - சீன ராணுவ வீரர்களுக்கு இடையே திடீர் மோதல் ஏற்பட்டது. இந்த விவகாரம் குறித்து உடனடியாக எந்த தகவலும் வெளியாக வில்லை.
‘தி இந்து’ ஆங்கில நாளிதழ் வெளியிட்ட செய்திக்குப் பிறகே, இப்படியொரு மோதல் எல்லையில் நடந்திருக்கிறது என்ற உண்மை நாட்டிற்கு தெரிய வந்தது. இனிமேலும் மறைக்க முடியாது என்ற நிலை வந்த பிறகே, தவாங் செக்டாரில் சீன ராணுவத் துருப்புக்கள் நுழைந்ததாகவும், அதற்கு இந்தியா பதிலடி கொடுத்த தாகவும் டிசம்பர் 12-ஆம் தேதி இந்திய ராணுவம் அதி காரப்பூர்வமாக அறிவித் தது. இந்த மோதலில் இரு தரப்பிலும் சில வீரர்கள் காயமடைந்தனர்; மோத லுக்குப் பின், இரு நாட்டு வீரர்களும் உடனடியாக அங்கிருந்து பின்வாங்கி, தத்தமது நிலைகளுக்குத் திரும்பி விட்டனர் என்றும் ராணுவம் கூறியது. இது எதிர்க்கட்சிகளை கொந்தளிப்பில் தள்ளியது. நாட்டின் பாதுகாப்பு சம் பந்தப்பட்ட பிரச்சனையை 3 நாட்கள் வரை மோடி அரசு மூடிமறைத்தது ஏன்? என்ற கேள்விகளை எதிர்க் கட்சிகள் எழுப்பின. மேலும், இதுதொடர்பாக நாடாளு மன்ற உறுப்பினர்களின் சந்தேகங்களுக்கு அரசு பதிலளிக்க வேண்டும். சீன ஊடுருவல் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.
ஆனால், “எல்லையில் நடந்த சம்பவம் தொடர் பாக ராஜதந்திர வழிகளில் சீனாவின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள் ளது. நமது நாட்டின் எல்லை களைப் பாதுகாப்பதற்கும் அதை மாற்றி அமை க்கும் முயற்சிகளை முறியடிப் பதற்கும் நமது ராணுவ வீரர்கள் உறுதியாக உள்ளனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து டிசம்பர் 11-ஆம் தேதி இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் இடையேயான பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், எல்லை ஊடுருவல் முயற்சிகளை சீன ராணுவம் மறுத்ததுடன் எல்லையில் அமைதி நிலைநாட்டப்படும் எனவும் தெரிவித்தது. இரு தரப்பிலும் ராணுவ வீரர்களுக்கு சிறிய காயங் கள் ஏற்பட்டன. இந்த நிகழ்வில் நமது ராணுவ வீரர்கள் கொல்லப்படவோ, படுகாயமடையவோ இல்லை என்பதை அவைக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். நமது ராணுவம் உரிய நேரத் தில் நடவடிக்கையில் இறங்கியதால் சீன ராணு வத்தினர் தங்களது நிலைகளுக்கு திரும்பிச் சென்றனர்” என்று அறிக்கை ஒன்றை தாக்கல் செய்ததோடு, ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த விவகாரத்தை எளிதாக கடந்து சென்றார். ஆனால், எதிர்க்கட்சி கள் அதனை ஏற்கவில்லை.
வழக்கமான அவை நடவடிக்கைகளை ஒத்தி வைத்து விட்டு, சீன ஊடுருவல் விவகாரம் தொடர் பாக விவாதம் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை யை வலியுறுத்தி, எதிர்க்கட்சிகள் செவ்வாயன்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அமளி யில் ஈடுபட்டன. அவையிலிருந்து வெளிநடப்பும் செய்தன. இதனால் நாடாளுமன்ற அவை நட வடிக்கைகள் பாதிக்கப்பட்டன. இதனிடையே, புதனன்று நாடாளுமன்றம் கூடியபோது, எதிர்க்கட்சிகள் மீண்டும் இந்த விவகாரத்தை எழுப்பி போராட்டத்தில் ஈடு பட்டன. சபாநாயகர் ஓம் பிர்லா, எதிர்க்கட்சி களின் தொடர் அமளிக்கு கடும் எதிர்ப்பும் அதிருப் தியும் தெரிவித்தார். ஆனாலும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தங்கள் நிலையைத் தொடர்ந்தனர். ஒருகட் டத்தில் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் மக்களவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலை வர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் எதிர்க் கட்சிகள் இந்த விவகாரத்தை கிளப்பின. எல்லை யில் நிகழ்ந்த இந்திய - சீன மோதல் குறித்து விவா திக்க வேண்டும் என்றும், இதற்காக கேள்வி நேரத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் கார்கே வலியுறுத்தினார். அப்போது மாநிலங்களவை தலைவர் இருக்கையில் அமர்ந்து அவையை நடத்திய ஹரிவன்ஷ், இதுகுறித்து விவாதிக்க அனுமதி இல்லை என தெரிவித்தார். மேலும், கேள்வி நேரத்தையும் அவர் தொடங்கினார். அப்போது பேசிய தேசியவாத காங்கிரஸ் எம்.பி. பாஜியா கான், இந்திய - சீன மோதல் குறித்து கேள்வி எழுப்பினார். ஆனால், மாநிலங்களவை துணைத்தலைவர் ஹரிவன்ஷ் குறுக்கிட்டு, இந்த விவகாரம் குறித்து பேச அனுமதி இல்லை என்று கூறினார். இதையடுத்து, காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, திமுக, மதிமுக, ராஷ்ட்ரிய ஜனதாதளம், ஐக்கிய ஜனதாதளம், திரிணாமுல் காங்கிரஸ், உள்ளிட்ட 17 எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் அவையிலிருந்து கூட்டாக வெளிநடப்பு செய்த னர். நாடாளுமன்றத்திற்கு வெளியே செய்தியா ளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்.பி. பிரமோத் திவாரி, “வெளிநடப்பில் ஈடுபட்டுள்ள 17 எதிர்க் கட்சிகளும் நமது ராணுவ வீரர்களுக்கு ஆத ரவாக உள்ளன. அதேநேரத்தில், எல்லைப் பிரச்சனையைப் பொறுத்தவரை அதில் சமரசத்திற்கு இடமில்லை. அனைத்தையும்விட நாட்டின் பாதுகாப்பு மிகவும் முக்கியம்” என தெரிவித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் எம்.பி. ஜான் பிரிட்டாஸ் கூறுகையில், “இந்த விவகாரம் குறித்து விவாதம் நடத்த அரசு ஏன் தயாராக இல்லை? என்பது எங்களுக்கு விளங்க வில்லை” என குறிப்பிட்டார்.