புதுதில்லி, மார்ச் 9- ஜிஎஸ்டி வரி நடைமுறையில் உள்ள 5 சதவிகித வரியை 8 சதவிகிதமாக வும், 12 சதவிகிதத்தை 18 சதவிகிதமாக வும் உயர்த்த ஜிஎஸ்டி கவுன்சில் பரி சீலித்து வருவதாக தகவல் வெளியாகி யுள்ளது. நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பு நடைமுறையைக் கொண்டு வரும் விதத்தில் 2017-ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஒன்றாம் தேதி சரக்கு மற்றும் சேவை வரி அமல் படுத்தப்பட்டது. அப்போது, 5 சதவிகிதம், 12 சதவிகிதம், 18 சத விகிதம், 28 சதவிகிதம் என மொத்தம் நான்கு அடுக்குகளின் கீழ் பொருட்களுக்கு வரி விதிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த ஜிஎஸ்டி வரி வருவாயை பெருக்கு வது தொடர்பாக மாநில நிதியமைச்சர்கள் தலைமையிலான குழு விரைவில் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளதாக கூறப்படும் நிலை யில் அந்த அறிக்கையில், 5 சதவிகித வரி அடுக்கை 8 சத விகிதமாக உயர்த்தும் பரிந்துரை முன்வைக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த வரி உயர்வின் மூலம் ஒன்றிய அரசுக்கு ஆண்டுக்கு ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு கூடுதல் வரி வருவாய் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. மேலும், வரி அடுக்கு முறையை 8 சதவிகிதம், 18 சதவிகிதம், 28 சதவிகிதம் என மூன்று அடுக்குகளாக மாற்றவும் மாநில நிதி யமைச்சர்கள் குழு பரிசீலித்து வருவதாக தெரிகிறது. இந்த வரி சீரமைப்பு முறை அமலுக்கு வரும்பட்சத்தில் 12 சதவிகித வரி அடுக்கில் உள்ள பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி இனி 18 சதவிகிதமாக மாறிவிடும். அத்துடன், ஜிஎஸ்டி வரி விதிப்பிலிருந்து, விலக்கு அளிக்கப்பட்டுள்ள பொருட்களுக்கும் வரி விதிப்பது குறித்து அமைச்சர்கள் குழு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.