புதுதில்லி, ஆக. 9 - மோடி அரசுக்கு ஜன நாயகப் பண்பு முற்றிலும் இல்லை என்று திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுப்பராயன் விமர்சித் தார். மோடி அரசின் மீது கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மா னத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்று இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுப்பராயன் பேசுகை யில், “மணிப்பூர் பிரச்சனை யில் பிரதமர் மோடி பதி லளிக்க வேண்டும் என்பது ஜனநாயக ரீதியான கோரிக்கை. இந்த கோரி க்கையை முரட்டுத்தனமாக நிராகரித்ததால் சபை முடங்கியது. ஜனநாயக பண்புகள் ஆட்சியாளர் களுக்கு இல்லை. 9 ஆண்டுகால இந்திய அனு பவம் என்பது ஜனநாயக அமைப்பில் நம்பிக்கை இல்லாதவர்கள் அதிகா ரத்துக்கு வந்துவிட்டார்கள் என்பதை வெளிப்படுத்து கிறது. ஜனநாயக எதிர்ப்பை சகிக்கும் போக்கு ஆளும்தரப்பிடம் இல்லை. ராகுல் காந்தி உரையாற்றும் போது சகிக்க முடியாமல் குறுக்கீடு செய்கிறார்கள்” என்று கூறினார். மேலும், “இந்துத்துவா வேறு; இந்தியா வேறு. இந்துத்துவா என்ற சொல்லே இல்லை.
வேலை வாய்ப்பு தரும் நிறுவனங்கள் அழிக்கப்படுகின்றன கார்ப்ப ரேட்டுகளான அதானி, அம்பானிகள் வளர்ந்தால் நாடு வளரும் என பிரதமர் மோடியின் பொருளாதார ஆலோசகர் சொல்கிறார். சமூக செல்வத்தை உரு வாக்குவது அதானி, அம்பானி என்கிற தவறான புரிதல் இருப்பதால் நாடு சீரழிந்து கொண்டிருக்கிறது. ஊழலை ஒழிக்கிறோம் என்பது வடிகட்டிய பொய். பி.எம். கேருக்கான நிதி கிடைத்தது எவ்வளவு? எவ் வளவு செலவு செய்தீர்கள் என கேள்வி கேட்டால் பதில் சொல்ல ஏன் அச்சம்? பாஜக ரூ. 6,000 கோடி தேர்தல் நிதி திரட்டியது எப்படி? தேர்தல் பத்திரம் மூலம் யாரி டம் இருந்து பெறப்பட்டது என்பதை பாஜக அறி விக்குமா? கார்ப்பரேட்டு களுக்காக ரூ. 14 லட்சம் கோடி கடன்களை தள்ளு படி செய்துள்ளீர்கள்; 9 ஆண்டுகளில் 18 கோடி பேருக்கு வேலை கிடைத் திருக்க வேண்டும்; ஆனால், 9 ஆண்டுகளில் 5 கோடி பேர் வேலை இழந்து விட்டனர். சிறு குறு தொழில்கள் நிலை குலைந்து நெருக்கடியில் இருக்கிறது. மாநில உரிமைகளைப் பறிக்கிறீர்கள். இது ஆத்திர மூட்டும் வேலை. சிறு பான்மையினர், எஸ்சி, எஸ்டி யினர் வரலாறு காணாத வகையில் தாக்கப்படு கின்றனர். 75 ஆண்டுகாலம் கட்டிக்காத்த பொதுத்துறை நிறுவனங்களை 9 ஆண்டு களில் விற்க அதிகாரம் கொடுத்தது யார்?” என்று சுப்பராயன் கேள்விகளை எழுப்பினார்.