states

img

ஒன்றிய அரசுத் துறைகளில் 8.72 லட்சம் காலிப் பணியிடங்கள்!

புதுதில்லி, பிப்.5- ஒன்றிய அரசுத் துறைகளில் 8 லட் சத்து 72 ஆயிரத்து 243 காலிப்பணி யிடங்கள் உள்ளதாக ஒன்றிய அரசின் பணியாளர் நலத்துறை இணையமைச் சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மாநிலங்களவை யில் நடைபெற்ற கேள்வி நேரத்தின் போது, ஒன்றிய அரசுத் துறைகளில் இருக்கும் காலிப்பணியிடங்கள்  குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு ஒன் றிய பணியாளர் நலத்துறை இணைய மைச்சர் ஜிதேந்திர சிங், எழுத்துப் பூர்வமாக பதிலளித்துள்ளார். அதில், “2018 மார்ச் 1 நிலவரப்படி, 6 லட்சத்து 83 ஆயிரத்து 823 காலிப் பணியிடங்களும், 2019 மார்ச் 1 அன் றைய நிலவரப்படி, 9 லட்சத்து 10 ஆயி ரத்து 153 காலிப் பணியிடங்களும் இருந்தன.

இதில், 2018-19 மற்றும் 2020-21 ஆம் ஆண்டுகளில் பணியாளர் தேர்வா ணையம் (Staff Selection Commission - SSC), ஒன்றிய பணியா ளர் தேர்வாணையம் (Union Public Service Commission- UPSC) மற்றும் ரயில்வே பணியாளர் தேர்வு வாரியங் கள் (Railway Recruitment Boards - RRB) ஆகிய மூன்று பெரிய பணி யாளர் தேர்வாணையங்கள் மூலம் 2 லட்சத்து 65 ஆயிரத்து 468 பணியா ளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.  அதைத்தொடர்ந்து, கடந்த 2020-ஆம் ஆண்டு மார்ச் 1 அன்றைய நில வரப்படி, ஒன்றிய அரசுத் துறைகளில், தற்போது 8 லட்சத்து 72 ஆயிரத்து 243 பணியிடங்கள் காலியாக உள்ளன. சிவில் சர்வீசஸ் தேர்வுகளை நடத் தும் ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வா ணையத்திலேயே (UPSC) 485 காலிப் பணியிடங்கள் உள்ளன. காலிப் பணி யிடங்களை நிரப்புவது ஒரு தொடர் நடவடிக்கையாக மேற்கொள்ளப் பட்டு வருகிறது” என்று ஜிதேந்திர சிங் குறிப்பிட்டுள்ளார்.