டெல் அவிவ், ஜன.2- பாலஸ்தீனத்திற்கு எதிராகப் பெரும் ராணுவ வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டுள்ள இஸ்ரேலில் பெஞ்சமின் நேதன்யாஹூ தலைமையில் அதிதீவிர வலதுசாரி அரசு அமைக்கப்பட்டிருக்கிறது. 73 வயதாகும் நேதன்யாஹூவுக்கு ஆதரவாக நாடாளு மன்றத்தில் 63 பேர் வாக்களித்தனர். மொத்தமுள்ள 120 உறுப்பினர்களில் அவருக்கு எதிராக 54 பேர் வாக்கு செலுத்தினார்கள். இஸ்ரேல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு வலதுசாரிகள் அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கிறார்கள். முதலில் 1996 முதல் 1999 வரை யிலும், பின்னர் 2009 முதல் 2021 வரையிலும் பிரதமராக இருந்த நேதன்யாஹூ, பாலஸ்தீன ஆக்கிரமிப்பை மேலும் விரிவுபடுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிற அரபு நாடுகளுடன் நட்புறவை ஏற்படுத்தி, பாலஸ் தீன ஆக்கிரமிப்பை நியாயப்படுத்தும் முயற்சியில் அவர் இறங்கவிருக்கிறார். அதற்கு தான் முன்னுரிமை அளிக்கப் போவதாக நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப் பின்போது தெரிவித்தார். கடந்த நான்கு ஆண்டுகளில் ஐந்து அமைச்சரவைகள் பொறுப்பேற்ற நிலையற்ற தன்மை இஸ்ரேல் அரசியலில் இருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.