இனி மொபைல் செயலி மூலம் பதிவு செய்ய வேண்டும் என்று ஊரக வளர்ச்சித் துறை அறி வித்துள்ளது. இந்த அறிவிப்பு வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பதற்குப் பதிலாக, எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும். வேலையாட்கள் தங்க ளின் கூலியைப் பெறுவதில் சிக்கலை உரு வாக்கும். விலை உயர்ந்த ஸ்மார்ட் போன் இல்லா தவர்கள், குறிப்பாக பெண்கள், விளிம்புநிலை மக்கள் தங்களுக்கான அதிகாரத்தை இழப்பார் கள். சுருக்கமாக, கோடிக்கணக்கான மக்க ளுக்கு வாழ்வாதாரமாக இருக்கும் ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் இந்த நடவ டிக்கை காரணமாக அதன் மதிப்பை இழக் கும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதிச் சட்டத்தின் செலவினங்களைக் குறைப்பதற்காக மோடி அரசு எடுத்திருக்கும் இந்த கொள்ளைப்புற நடவடிக்கை ஏழைகள் மீதான அப்பட்டமான தாக்குதலாகும். இந்த நடவடிக்கை ஊழலுக்கு வழிவகுத்து ஏழைகள், ஒடுக்கப்பட்டோர், பழங்குடியின மக்களை அதி காரம் இழக்கச் செய்யும்.
மொபைல் செயலி மூலம் வருகையை பதிவு செய்யும் போது ஆவணங்கள் அனைத்தும் மொபைலிலேயே இருக்கும். இந்த திட்டத்தின் கீழ் முடிக்கப்பட்ட வேலைகளுடன் தொடர்புடை யதாக ஊதியம் உள்ளது. ஆனால், செயலி யில் இது குறித்த விவரங்கள் இல்லை. இந்த புதிய முறை நடைமுறைக்கு ஏற்றது இல்லை என்பது மட்டுமல்ல, இது வெளிப்படைத்தன்மை யை குலைக்கிறது. முந்தைய நடைமுறையில் அனைவரும் வேலைக்கு வரும்போது கையெழுத்திட வேண் டும். இது சமூக தணிக்கைக்கும் உட்படுத்தப் பட்டது. புதிய செயலியின் மூலம், சர்வர் செயலி ழந்திருக்கும் போது, தொழிலாளர்கள் வேலை மற்றும் ஊதியத்தை இழக்கும் வாய்ப்பு அதி கம். அதேபோல் குழு படம் எடுப்பதற்கு குறிப் பிட்ட நேரத்தில் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டியது இருக்கும். தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு உணவு தானியங்களை பாதியாகக் குறைக்கும் நடவடிக்கையுடனும் இது இணைந்துள்ளது. கொரோனா பெருந் தொற்று, ஒன்றிய அரசின் தவறான பொருளா தார மேலாண்மை ஆகியவை காரணமாக கடு மையாக பாதிக்கப்பட்டிருக்கும் ஏழை - எளிய மக்களின் முக்கிய வாழ்வாதாரமாக தேசிய ஊரக வேலை உறுதித் திட்டமும், தேசிய உணவுப் பாதுகாப்பு திட்டமும் உள்ளன. இந்த இரண்டு திட்டங்களின் மீதும் நடத்தப் பட்டிருக்கும் இரட்டைத் தாக்குதல் காரண மாக ஏழைகள் அதிகம் பாதிக்கப்படுவார்கள். எனினும், இதுகுறித்து பிரதமர் மோடிக்கு அக் கறை இல்லை என்பதை இந்த நடவடிக்கைகள் தெளிவான உணர்த்துகின்றன.’’ இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள் ளார்.