states

img

பாலியல் குற்றவாளி சாமியார் குர்மீத் ராமிடம் ஆசிபெற்ற ஹரியானா பாஜக துணை சபாநாயகர்!

புதுதில்லி, அக். 21 - பரோலில் வெளியே வந்துள்ள பாலியல்  வழக்கு குற்றவாளி சாமியார் குர்மீத் ராம் ரஹீமிடம் ஆசிபெற பாஜக-வினர் படையெடுக்கத் துவங்கியுள்ளனர். தேரா சச்சா சவுதா தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங், 2017-ஆம் ஆண்டு பாலியல் வல்லுறவு வழக்கில் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த 5 ஆண்டுகளாக அவர் சிறையில் இருந்து வந்த நிலையில், அவரது குடும்பத்தினர் தாக்கல் செய்த விண்ணப்பத்தைத் தொடர்ந்து கடந்த வாரம் குர்மீத் ராம் ரஹீம் சிங்-கிற்கு 40 நாள்  பரோல் வழங்கப்பட்டது. பரோலில் வந்த குர்மீத் ராம் ரஹீம் ஆன்லைன் மூலம் சபா நிகழ்ச்சி நடத்தி வருகிறார். இந்நிலையில், குர்மீத் ராம் ரஹீம் சிங்கின் நிகழ்ச்சியில், இந்துத்துவா அமைப்பினரும், பாஜக-வினரும் முண்டி யடித்து கலந்து கொள்ளத் துவங்கி யுள்ளனர். ஆன்லைன் மூலம் அவ ருக்கு மரியாதை செய்ய கியூவில் காத்திருக் கின்றனர். அந்த வகையில், குர்மீத் ராம்  ரஹீமின் ஆன்லைன் சபா நிகழ்வின் போது, ஹரியானா மாநில சட்டமன்ற துணை சபாநாயகர் ரன்பீர் சிங் கங்வாவும் கலந்து கொண்டு குர்மீத் ராமுக்கு மரியாதை செய்துள்ளார். இந்த புகைப்படம் இணைய தளங்களில் வைரலாகி வருகிறது. இதேபோல ஹரியானா பாஜக தலை வர்கள் பலரும், ஆன்லைன் சத்சங்கில் கலந்து கொண்டு வருகின்றனர். வல்லுற வுக் குற்றச்சாட்டில் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட குர்மீத் ராம்  ரஹீம் சிங்கிடம் ஹிசார் மேயர் கவுதம் சர்தா னாவின் மனைவியும் ஆசி பெற்றுள்ளார்.