முப்படை தளபதிகள் குழுவின் தலைவராக ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவானே நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே ஹெலிகாப்டர் விபத்தில் இந்தியாவின் முப்படை தளபதியான பிபின் ராவத், அவரின் மனைவி உட்பட அதில் பயணம் செய்த 14 பேரும் உயிரிழந்தனர். இந்த நிலையில் முப்படை தளபதிகளில் மூத்தவர் என்ற அடிப்படையில் முப்படை தளபதிகள் குழுவின் தலைவராக மனோஜ் முகுந்த் நரவானே நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
முப்படைகளின் தலைமைத் தளபதி தேர்வு செய்யப்படும் வரை குழுவின் தலைவராக நரவானே செயல்படுவார் என ஒன்றி அரசு அறிவிக்கப்பட்டுள்ளது.